பாடல் #991
மேய்ப்பனின் குரல் கேட்கும்
🔤 Maeyppanin Kural Kaetkum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மேய்ப்பனின் குரல் கேட்கும் சின்ன ஆட்டுக்குட்டியாம் நானே அழுகையின் குரல் கேட்டு என்னை தேடி வந்தார் இயேசுராஜன் புதரிலே சிக்குண்டேனே பயந்து நான் நடுங்கினேனே அழைத்தார் என்னை அன்றே அன்பரின் குரல் கேட்டேன் கீழ்ப்படியாமல் ஓர் நாள் ஓடி ஓடி ஒளிந்தேனே தேடிவந்து என்னைப் பிடித்தார் தற்பரன் இயேசு ராஜன் ஓநாய் ஓர் நாள் என்னை பின் தொடர்ந்து முன்வந்ததே விலக்க என் கோலுமானார் - என்னை விடுவிக்கும் தடியுமானார் அன்பரின் குரல் கேட்ட நல்ல ஆட்டுக்குட்டியாம் நானே அடங்கி நடப்பேனே அவர் தோளில் இருப்பனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maeyppanin Kural Kaetkum Sinna Aattukkuttiyaam Naanae Azhukaiyin Kural Kaettu Ennai Thaeti Vanthaar Yesuraajan Pudharilae Sikkuntaenae Payanthu Naan Natungkinaenae Azhaitthaar Ennai Anrae Anbarin Kural Kaettaen Keezhppatiyaamal Or Naal Oti Oti Olinthaenae Thaetivanthu Ennaip Pititthaar Tharparan Yesu Raajan Onaay Or Naal Ennai Pin Thodarnthu Munvandhathae Vilakka En Kolumaanaar - Ennai Vituvikkum Thatiyumaanaar Anbarin Kural Kaetta Nalla Aattukkuttiyaam Naanae Adangki Natappaenae Avar Tholil Iruppanae