பாடல் #9068
உயர்பரனில் உதித்த
🔤 Uyarparanil Uthittha
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1.உயர்பரனில் உதித்த தெல்லாம் உலகதனை ஜெயிக்கு மன்றோ? உயிருள மெய்விசுவாசமே உலகை ஜெயிக்கும் ஜெயமே. 2.ஏசுதெய்வ சுதனென்றே ஏற்க விஸ்வாசிப்பவனே மாசு நிறை உலகதனை மறுத்தவர்போல் ஜெயிப்பவனே. 3.தற்பரனார் தருஞ்சாட்சிதஞ்சுதனைக் குறிக்குமென்றோ? பொற்புறுமிக் சாட்சியமே புவிதனக்கு மேலாமே. 4.நித்தியனார் நமக்கீந்த நித்தியமாஞ் சீவனது நித்தியராந் தஞ் சுதனுள் நிலைத்துளதாம் அச்சாட்சி. 5.திருச்சுதனார் தமையுடையோன் பெருக்கமுறும் ஜீவனுளோன் கருணையுளார் தமையற்றோன் சிறிதளவுஞ் ஜீவனற்றோன. 6.நீடுழி பிழைப்பவரே நீசரும்மில் பிழைத்தென்றும் பாடற்றெம் அகமகிழ பரிவொடெமைப் பாருமையா.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1.uyarparanil Uthittha Thellaam Ulakathanai Jeyikku Manro? Uyirula Meyvisuvaasamae Ulakai Jeyikkum Jeyamae. 2.aesutheyva Sudhanenrae Aerka Visvaasippavanae Maasu Nirai Ulakathanai Marutthavarpol Jeyippavanae. 3.tharparanaar Tharunjsaatsidhanjsudhanaik Kurikkumenro? Porpurumik Saatsiyamae Puvidhanakku Maelaamae. 4.nitthiyanaar Namakkeendha Nitthiyamaanj Seevanathu Nitthiyaraan Thanj Sudhanul Nilaitthulathaam Achsaatsi. 5.thiruchsudhanaar Thamaiyutaiyon Perukkamurum Jeevanulon Karunaiyulaar Thamaiyarron Siridhalavunj Jeevanarrona. 6.neetuzhi Pizhaippavarae Neesarummil Pizhaitthenrum Paadarrem Agamakizha Parivotemaip Paarumaiyaa.