பாடல் #9034
என் கணவனைப் போல்
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
என் கணவனைப் போல் எவர்க்கு கிடைக்கும், சொந்தமுடன் வந்தென்னை கல்யாணம் முடிக்கும், என் கணவனைப் போல் எவர்க்கு கிடைக்கும். 1. பாவி தள்ளமாட்டார், பக்தரை கைவிட மாட்டார், ஆவி பிரியும் போது, அன்பரை பிரியமாட்டார். 2. ஆழி பொங்கி வந்தாலும், ஆபத்து நேரிட்டாலும், பாழ் உலகில் எந்தனையே பாதுகாப்பார் எக்காலமும். 3. வாரா வினை வந்தாலும், வாதை பிணி நேர்ந்தாலும், சோராதிருக்க பெலன், சீராய் தந்தரசாளும்