பாடல் #8831
தயாபரா எல்லா
🔤 Thayaabaraa Ellaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1.தயாபரா எல்லா நல்லீவின் ஊற்றும் நீரே உண்டானதை எல்லாம் அளித்தோர் தேவரீரே என் தேகம் ஆவிக்கும் என் மனச்சாட்சிக்கும் சீராயிருக்கிற ஆரோக்கியம் கொடும். 2.என் நிலைமையிலே நீர் எனக்குக் கற்பித்து கொடுத்த வேலையை கருத்தாய் நான் முடித்து நான் தக்க வேளையில் ஒவ்வொன்றைச் செய்யவும் என் செய்கை வாய்க்கவும் சகாயமாயிரும் 3.எப்போதும் ஏற்றதை நான் வசனிப்பேனாக வீண் பேச்சென் நாவிலே வராதிருப்பதாக என் உத்தியோகத்தில் நான் பேசவேண்டிய சொல் விசனமில்லா பலத்தைக் காண்பிக்க 4.என் சாவை கிறிஸ்துவின் சாவால் ஜெயிப்பேனாக பிரிந்த ஆவியை உம்மண்டை சேர்ப்பீராக சவத்துக்கோவெனில் நல்லோர் கிடக்கிற குழிகளருகே இடம் அகப்பட 5.செத்தோரை நீர் அந்நாள் எழுப்பும் போதன்பாக என் மண்ணின் மேலேயும் வாவென்ற சத்தமாக கை நீட்டி எனக்கு நீர் ஜீவனுடனே வானோரின் ரூபத்தை அளியும் கர்த்தரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1.thayaabaraa Ellaa Nalleevin Oorrum Neerae Untaanathai Ellaam Alitthor Thaevareerae En Thaegam Aavikkum En Manachsaatsikkum Seeraayirukkira Aarokkiyam Kotum. 2.en Nilaimaiyilae Neer Enakkuk Karpitthu Kotuttha Vaelaiyai Karutthaay Naan Mutitthu Naan Thakka Vaelaiyil Ovvonraich Seyyavum En Seykai Vaaykkavum Sakaayamaayirum 3.eppothum Aertrathai Naan Vasanippaenaaga Veen Paechsen Naavilae Varaathiruppathaaga En Utthiyogatthil Naan Paesavaentiya Sol Visanamillaa Palatthaik Kaanpikka 4.en Saavai Kiristhuvin Saavaal Jeyippaenaaga Pirindha Aaviyai Ummantai Saerppeeraaga Savatthukkovenil Nallor Kidakkira Kuzhigalarukae Idam Agappata 5.setthorai Neer Annaal Ezhuppum Podhanpaaga En Mannin Maelaeyum Vaavendra Satthamaaga Kai Neetti Enakku Neer Jeevanudanae Vaanorin Roobatthai Aliyum Karttharae