பாடல் #8104
பாவிக்காய் மரித்த
🔤 Paavikkaay Marittha
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. பாவிக்காய் மரித்த இயேசு மேகமீதிறங்குவார்; கோடித் தூதர் அவரோடு வந்து ஆரவாரிப்பார் அல்லேலூயா கர்த்தர் பூமி ஆளுவார். 2. தூய வெண் சிங்காசனத்தில் வீற்று வெளிப்படுவார் துன்புறுத்திச் சிலுவையில் கொன்றோர் இயேசுவைக் காண்பார் திகிலோடு மேசியா என்றறிவார். 3. அவர் தேகம் காயத்தோடு அன்று காணப்படுமே பக்தர்கள் மகிழ்ச்சியோடு நோக்குவார்கள் அப்போதே அவர் காயம் தரும் நித்திய ரட்சிப்பை. 4. உம்மை நித்திய ராஜனாக மாந்தர் போற்றச் செய்திடும் ராஜரீகத்தை அன்பாக தாங்கி செங்கோல் செலுத்தும் அல்லேலூயா வல்ல வேந்தே, வந்திடும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Paavikkaay Marittha Yesu Maegameethirangkuvaar; Kotith Thoodhar Avarotu Vanthu Aaravaarippaar Allaelooyaa Kartthar Poomi Aaluvaar. 2. Thooya Ven Singkaasanatthil Veerru Velippatuvaar Thunpurutthich Siluvaiyil Konror Yesuvaik Kaanpaar Thikilotu Maesiyaa Endrarivaar. 3. Avar Thaegam Kaayatthotu Anru Kaanappatumae Paktharkal Makizhchsiyotu Nokkuvaarkal Appothae Avar Kaayam Tharum Nitthiya Ratsippai. 4. Ummai Nitthiya Raajanaaga Maandhar Portrach Seythitum Raajareegatthai Anpaaga Thaangki Sengkol Selutthum Allaelooyaa Valla Vaenthae, Vanthitum.