பாடல் #7800
கர்த்தாவை நல்ல பக்தியாலே
🔤 Kartthaavai Nalla Pakthiyaalae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. கர்த்தாவை நல்ல பக்தியாலே எப்போதும் நம்பும் நீதிமான் எத்தீங்கிலேயும் அவராலே அன்பாய்க் காப்பாற்றப்படுவான்; உன்னதமான கர்த்தரைச் சார்ந்தோருக்கவர் கன்மலை. 2. அழுத்தும் கவலைகளாலே பலன் ஏதாகிலும் உண்டோ, நாம் நித்தஞ்சஞ்சலத்தினாலே தவிப்பது உதவுமோ விசாரத்தாலே நமக்குத் தீங்கதிகரிக்கிறது. 3. உன் காரியத்தை நலமாகத் திருப்ப வல்லவருக்கு நீ அதை ஒப்புவிப்பாயாக; விசாரிப்பார். அமர்ந்திரு மா திட்டமாய்த் தயாபரர் உன் தாழ்ச்சியை அறிந்தவர். 4. சந்தோஷப்பிக்கிறதற்கான நாள் ஏதென்றவர் அறிவார்; அநேக நற்குணங்கள் காண அந்தந்த வேளை தண்டிப்பார் அசுப்பிலே திரும்பவும் தெய்வன்பு பூரிப்பைத் தரும். 5. நீ கர்த்தரால் கைவிடப்பட்டோன் என்றாபத்தில் நினையாதே; எப்போதும் பாடும் நோவுமற்றோன் பிரியனென்றும் எண்ணாதே அநேக காரியத்துக்குப் பின்னாலே மாறுதல் உண்டு. 6. கதியுள்ளோனை ஏழையாக்கி மகா எளியவனையோ திரவிய சம்பன்னனாக்கி உயர்ந்த ஸ்வாமிக்கரிதே; தாழ்வாக்குவார், உயர்த்துவார் அடிக்கிறார், அணைக்கிறார். 7. மன்றாடிப்பாடிக் கிறிஸ்தோனாக நடந்து கொண்டுன் வேலையை நீ உண்மையோடே செய்வாயாக; அப்போ தெய்வாசீர்வாதத்தைத் திரும்பக்காண்பாய்; நீதிமான் கர்த்தாவால் கைவிடப்படான்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Kartthaavai Nalla Pakthiyaalae Eppothum Nampum Neethimaan Ettheengkilaeyum Avaraalae Anpaayk Kaappaartrappatuvaan; Unnathamaana Karttharaich Saarnthorukkavar Kanmalai. 2. Azhutthum Kavalaigalaalae Palan Aethaakilum Unto, Naam Nitthanjjanjjalatthinaalae Thavippathu Udhavumo Visaaratthaalae Namakkuth Theenggathigarikkirathu. 3. Un Kaariyatthai Nalamaagath Thiruppa Vallavarukku Nee Athai Oppuvippaayaaga; Visaarippaar. Amarnthiru Maa Thittamaayth Thayaabarar Un Thaazhchsiyai Arindhavar. 4. Santhoshappikkiratharkaana Naal Aethendravar Arivaar; Anaega Narkunanggal Kaana Andhandha Vaelai Thantippaar Asuppilae Thirumbavum Theyvanpu Poorippaith Tharum. 5. Nee Karttharaal Kaividappatton Enraabatthil Ninaiyaathae; Eppothum Paatum Novumarron Piriyanenrum Ennaathae Anaega Kaariyatthukkup Pinnaalae Maarudhal Untu. 6. Kathiyullonai Aezhaiyaakki Makaa Eliyavanaiyo Thiraviya Sambannanaakki Uyarndha Svaamikkarithae; Thaazhvaakkuvaar, Uyartthuvaar Atikkiraar, Anaikkiraar. 7. Manraatippaatik Kiristhonaaga Natanthu Kontun Vaelaiyai Nee Unmaiyotae Seyvaayaaga; Appo Theyvaaseervaadhatthaith Thirumbakkaanpaay; Neethimaan Kartthaavaal Kaividappataan.