பாடல் #7763
ஏன் சலிப்பேன் கிறிஸ்து நிற்பார்
🔤 Aen Salippaen Kiristhu Nirpaar
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ஏன் சலிப்பேன், கிறிஸ்து நிற்பார் இவ்விதப் பரம முத்தை யார் பறிப்பார். எனக்கங்கே வைத்திருக்கும் மோட்சத்தை எவன் கைக் கொள்ளையிட்டெடுக்கும். 2. நான் நிர்வாணமாய்ப் பிறந்தேன், ஆஸ்தியும் எதுவும் இன்றி இங்கே வந்தேன்; மீளவும் நிர்வாணமாவேன், ஏனெனில் லோகத்தில் யாவும் விட்டுச் சாவேன். 3. ஆஸ்தி ஜீவன் தேகம் ரத்தம் தம்பிரான் கையில் நான்; ஈவாய்ப் பெற்ற தத்தம்; அவர் மீளவும் எடுத்தும், பாக்கியம்; என் மனம் தோத்திரஞ் செலுத்தும் 4. மா சுமை என் முதுகுக்கு வரவே, நெஞ்சிலே துக்கம் என்னத்துக்கு; அதை வரப்பண்ணுங் கர்த்தர் தயவாய் லேசுமாய் நீக்கவுஞ் சமர்த்தர். 5. பல இன்பத்தை இம்மட்டும் தந்தாரே; வாழிந்தேனே, துன்பமும் வரட்டும். அவர் தண்டனைகள் சாது; அவர் கை அத்துணைக் கூர்மையாய் வெட்டாது. 6. சரச நகைப்பைப் பேயும் லோகமும் காட்டியும், வேறே என்ன செய்யும்; சரசங்களைப் பண்ணட்டும், தெய்வக் கை சிறுமை வந்தபின் உயர்த்தும். 7. கிறிஸ்தவன் துன்னாளுக்காகப் பயமும் திகிலும் அற்றிருப்பானாக; சாவுக்கும் அஞ்சாதிருக்கும் வீரமும் ஆண்மையும் அவனுக்கடுக்கும். 8. எந்தச் சாவு நம்மைக் கொல்லும், சாவெனில் மோட்சத்தில் நம்மை வரச் சொல்லும்; சாவில் எந்தத் துன்பத்துக்கும் தெய்வக் கை ஆவியைத் தப்புவித் தெடுக்கும். 9. அங்கே பூரிப்பாய்க் கெலிப்பேன், நோவின் பின் வானத்தின் மேன்மையைத் தரிப்பேன். இங்கே மெய்ப்பொருள் காணாது, உலக வாழ்வான வேஷங்கள் நில்லாது. 10. சகல பூலோக நன்றும் மண் அல்லோ; நெஞ்சுக்கோ துக்கம் உண்டு பண்ணும்; அங்கே, அங்கே, என்றென்றைக்கும் உத்தம, இனிய நன்மைகள் கிடைக்கும். 11. பரதீசின் எஜமானே, இப்போதும் என்றைக்கும் நீர் என் செல்வந்தானே; உம்முடையோன் நான், நீர் தாமே எனக்காய்த் தயவாய் மாண்டமீட்பராமே. 12. என்னுடையோர் நீர், கர்த்தாவே, உம்மையே நெஞ்சிலே பற்றிநேன், பத்தாவே. என்னைச் சாரும்போதன்பாக மோட்சத்து வாழ்வுக்கு நீர் அழைப்பீராக.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Aen Salippaen, Kiristhu Nirpaar Ivvidhap Parama Mutthai Yaar Parippaar. Enakkangkae Vaitthirukkum Motsatthai Evan Kaik Kollaiyittetukkum. 2. Naan Nirvaanamaayp Piranthaen, Aasthiyum Ethuvum Inri Ingkae Vanthaen; Meelavum Nirvaanamaavaen, Aenenil Logatthil Yaavum Vittuch Saavaen. 3. Aasthi Jeevan Thaegam Rattham Thampiraan Kaiyil Naan; Eevaayp Pertra Thattham; Avar Meelavum Etutthum, Paakkiyam; En Manam Thotthiranj Selutthum 4. Maa Sumai En Muthukukku Varavae, Nenjsilae Thukkam Ennatthukku; Athai Varappannung Kartthar Thayavaay Laesumaay Neekkavunj Samartthar. 5. Pala Inbatthai Immattum Thanthaarae; Vaazhinthaenae, Thunbamum Varattum. Avar Thandanaigal Saathu; Avar Kai Atthunaik Koormaiyaay Vettaathu. 6. Sarasa Nakaippaip Paeyum Logamum Kaattiyum, Vaerae Enna Seyyum; Sarasanggalaip Pannattum, Theyvak Kai Sirumai Vandhapin Uyartthum. 7. Kiristhavan Thunnaalukkaagap Payamum Thikilum Arriruppaanaaga; Saavukkum Anjsaathirukkum Veeramum Aanmaiyum Avanukkatukkum. 8. Endhach Saavu Nammaik Kollum, Saavenil Motsatthil Nammai Varach Sollum; Saavil Endhath Thunbatthukkum Theyvak Kai Aaviyaith Thappuvith Thetukkum. 9. Angkae Poorippaayk Kelippaen, Novin Pin Vaanatthin Maenmaiyaith Tharippaen. Ingkae Meypporul Kaanaathu, Ulaka Vaazhvaana Vaeshanggal Nillaathu. 10. Sakala Poologa Nanrum Man Allo; Nenjsukko Thukkam Untu Pannum; Angkae, Angkae, Enrenraikkum Utthama, Iniya Nanmaigal Kitaikkum. 11. Paratheesin Ejamaanae, Ippothum Enraikkum Neer En Selvanthaanae; Ummutaiyon Naan, Neer Thaamae Enakkaayth Thayavaay Maandameetparaamae. 12. Ennutaiyor Neer, Kartthaavae, Ummaiyae Nenjsilae Parrinaen, Patthaavae. Ennaich Saarumpodhanpaaga Motsatthu Vaazhvukku Neer Azhaippeeraaga.