பாடல் #6290
இம்மட்டும் ஜீவன் தந்த
🔤 Immattum Jeevan Thandha
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
🎼 Scale: D Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த எண்ணமாய்த் ஸ்தோத்தரிப்போமாக-2 நம்மை ரட்சிக்க வந்து தம்மை பலியாய்த் தந்து-2 நற்சுகம் மேவவும் அற்புதமாகவும்-2 - இம்மட்டும் 1. காலம்சொல் போல் கழியும், தண்ணீரைப்போல் வடியும், கனாவைப் போலேயும் ஒழியும்; வாலிபமும் மறையும், சீலம் எல்லாம் குறையும், மண்னின் வாழ் வொன்றும் நிற்க மாட்டாது கோலப் பதுமைக்கும், நீர்க குமிழிக்கும், புகைக்குமே-2 கொண்ட உலகத்தில் அண்டபரன் எமைக் கண்டு கருணைகள் விண்டு தயவுடன் -இம்மட்டும் 2. பலவித இக்கட்டையும் திகில்களையும் கடந்தோம் பரம பாதையைத் தொடர்ந்தோம் வலிய தீமையை வென்றோம் , நலியும் ஆசையைக் கொன்றோம் , வஞ்சர் பகைக்கும் தப்பி நின்றோம் ; கலிஎன்ற தெல்லாம் விண்டோம் , கர்த்தாவின் மீட்பைக் கண்டோம்; காய்ந்த மனதொடு பாய்ந்துவிழு கணம் சாய்ந்து கெடவும் ஆராய்ந்து நெறியுடன் -இம்மட்டும் 3. சனசேதம் வருவிக்கும் , கேடுகட்கோர் முடிவு தந்து , நொறுங்கினதைக் கட்டிக் கன சபையை ஆதரித் தன்பாய் ஆசீர்வதித்துக் கண்ணோக்கி எல்லார்மேல் அன்றன்று தினமும் அருள் உதிக்கச் செய்து , தமது தேவ சிந்தை யினோடதி விந்தையதாய் உயிர் மைந்தனால் எங்களை இந்த வினோதமாய் -இம்மட்டும் 4. எச்சரிப்பும் விழிப்பும் விசாரிப்புமவர் தாமே இல்லாவிட்டால் வீணாமே உச்சிதமாய்த் தினமும் அன்பாய் நவமாய்ச் செய்த உயர் அனுக்கிரக மெல்லாம் மேன்மை நிச்சயமாய்ப் புகழும் தோத்திரமுந் துதியும் நித்திய காலமும் உத்தமமே வளர் பக்தி யோடே பலதுத்திய மாகவும். 5. இனியும் நீர் தாம் நேரிட்டு தமியோர்களை ரட்சித்தே எல்லா இக்கட்டிலேயும் கனிவாய்ச் சகாயம் செய்யும் துன்னாளில் நாங்கள் தாழ்ந்து கலங்கி மிரண்டும் உம்மைச் சார்ந்து அநியாய லோக வாழ்வை விட்டு நிலைக்கிறதுக் காகத் திடன் விடுத்து-யூகத்துடன் அடுத்து நாகப் பகை தடுத்து வேகத்தருள் கொடுத்து. 6. புசலை வரக் கண்டதாய், பெற்ற குழந்தை தனைப் பேணித் தற்காக்கும் நேர்மையே விசுவாசமாய் ரட்சகர், காலில் விழுந்து நோக்கும் மேன்மை சன் மார்க்கத்தாரையே நிசமாய்க் கர்த்தாவின் கையே-துன்நாளில் காக்கு மெய்யே நேயத்தினாலைந்து காயத்தினால் அதி சேயத்தினால் மிகு ஞாயத்தினாலுமே. 7. பொல்லாரைத் தயவாகத் திருப்பியருள் வீராக புத்தியற்றிருளிலே திரியும் கல்லா சனத்துக் கொளி வீயும் திக்கற்றவரைக் காரும் நோவாளிகளைப் பாரும் எல்லாத் துக்கித்தவரைத் தேற்றும் சாவாரை யேற்றும் எந்தலாதிப சாந்து தேவர்கை ஏந்தியே மிகு சாந்தமா யெமக்கு. 8. பரமதற்கு நேராக வர நடக்கிறதற்காகப் பலநாளுந் தெய் வாவியாலாளும் தரம தாலத்தியந்த பணிவதாய்க் கேட்டுவந்த சகல வரங்களையுந்தாரும் குரு மாருரையைக் கொண்டு திரமாய் வேத நாயகன் குணந்தரும் பத மிணங்கவன் பொடு வணங்கவந் தெமை மணஞ் செய்தன்புற.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Immattum Jeevan Thandha Kartthaavai Atthiyandha Ennamaayth Sthottharippomaaga-2 Nammai Ratsikka Vanthu Thammai Paliyaayth Thanthu-2 Narsugam Maevavum Arpudhamaagavum-2 - Immattum 1. Kaalamsol Pol Kazhiyum, Thanneeraippol Vatiyum, Kanaavaip Polaeyum Ozhiyum; Vaalibamum Maraiyum, Seelam Ellaam Kuraiyum, Mannin Vaazh Vonrum Nirka Maattaathu Kolap Pathumaikkum, Neerka Kumizhikkum, Pukaikkumae-2 Konda Ulakatthil Andaparan Emaik Kantu Karunaigal Vintu Thayavudan -immattum 2. Palavidha Ikkattaiyum Thikilkalaiyum Katanthom Parama Paathaiyaith Thodarnthom Valiya Theemaiyai Venrom , Naliyum Aasaiyaik Konrom , Vanjjar Pakaikkum Thappi Ninrom ; Kaliendra Thellaam Vintom , Kartthaavin Meetpaik Kantom; Kaayndha Manathotu Paaynthuvizhu Kanam Saaynthu Kedavum Aaraaynthu Neriyudan -immattum 3. Sanasaedham Varuvikkum , Kaetugatkor Mutivu Thanthu , Norungkinathaik Kattik Kana Sapaiyai Aadharith Thanpaay Aaseervathitthuk Kannokki Ellaarmael Andranru Thinamum Arul Uthikkach Seythu , Thamathu Thaeva Sinthai Yinodathi Vinthaiyathaay Uyir Maindhanaal Enggalai Indha Vinodhamaay -immattum 4. Eccharippum Vizhippum Visaarippumavar Thaamae Illaavittaal Veenaamae Uchsidhamaayth Thinamum Anpaay Navamaaych Seytha Uyar Anukkiraka Mellaam Maenmai Nicchayamaayp Pugazhum Thotthiramun Thuthiyum Nitthiya Kaalamum Utthamamae Valar Pakthi Yotae Palathutthiya Maagavum. 5. Iniyum Neer Thaam Naerittu Thamiyorkalai Ratsitthae Ellaa Ikkattilaeyum Kanivaaych Sakaayam Seyyum Thunnaalil Naanggal Thaazhnthu Kalangki Mirantum Ummaich Saarnthu Aniyaaya Loga Vaazhvai Vittu Nilaikkirathuk Kaagath Thidan Vitutthu-yoogatthudan Atutthu Naagap Pakai Thatutthu Vaegattharul Kotutthu. 6. Pusalai Varak Kandathaay, Pertra Kuzhanthai Thanaip Paenith Tharkaakkum Naermaiyae Visuvaasamaay Ratsakar, Kaalil Vizhunthu Nokkum Maenmai San Maarkkatthaaraiyae Nisamaayk Kartthaavin Kaiyae-thunnaalil Kaakku Meyyae Naeyatthinaalainthu Kaayatthinaal Athi Saeyatthinaal Miku Njaayatthinaalumae. 7. Pollaaraith Thayavaagath Thiruppiyarul Veeraaga Putthiyarrirulilae Thiriyum Kallaa Sanatthuk Koli Veeyum Thikkartravaraik Kaarum Novaaligalaip Paarum Ellaath Thukkitthavaraith Thaerrum Saavaarai Yaerrum Endhalaathiba Saanthu Thaevarkai Aenthiyae Miku Saandhamaa Yemakku. 8. Paramatharku Naeraaga Vara Natakkiratharkaagap Palanaalun They Vaaviyaalaalum Tharama Thaalatthiyandha Panivathaayk Kaettuvandha Sakala Varanggalaiyunthaarum Kuru Maaruraiyaik Kontu Thiramaay Vaedha Naayakan Kunandharum Patha Minanggavan Potu Vananggavan Themai Mananj Seythanpura.
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D Am D G Dm D D G A Dm Am D G D Am D G Dm D D Am D G Dm D D G A Dm Am D G