பாடல் #43209
கல்வாரி சிலுவையில் நீர் சிந்தின
🔤 Kalvaari Siluvaiyil Neer Sinthina
🎙 Pr. மோசஸ் சிவகுமார் • 💿 நான் கர்த்தருடையவன் சங்கீதங்கள்
🎼 Scale: Fm
🥁 Beat: 4/4
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கல்வாரி சிலுவையில் நீர் சிந்தின இரத்தம் கண் முன்னே ஓடுகின்றதே நான் கண்மூடிக்கொண்டு அந்த காலத்தை நினைக்கையில் என் ஏக்கம் கூடுகின்றதே முன்னாளில் நான் செய்த பாவத்தினால்தான் நீர் மரித்தீர் என்று உணர்ந்தேன் இந்நாளில் நான் இன்னும் உம்மோடு இசைந்திட ஓடோடி வந்து நிற்கிறேன் பாவத்திற்கு மரித்து நீதிக்குப் பிழைத்து நித்தியத்தை நான் அடைய வேண்டும் என்று நிந்தைகளைச் சகித்தீர் சிலுவையைச் சுமந்தீர் அத்தனையும் நினைக்கின்றேன் நானோ இன்று ஆனாலும் நீர் அன்று தானாக முன் வந்து எனை மீட்க மறந்திருந்தால் காணாமல் போயிருப்பேன் வீணாய் மரித்திருப்பேன் ஏனோ நீர் என்னை நினைத்தீர் தோள்வலிகள் எடுக்க கால் பாதம் கடுக்க கல்வாரி நோக்கி நீர் நடந்த போது என் முகத்தை நினைத்தீர் உபத்திரவம் பொறுத்தீர் உயிர் போகும் வரையிலும் ஒப்புக்கொடுத்தீர் எங்கோ பிறந்த என்னை எடுத்தெறிந்து போடாமல் உயிர் கொடுத்து வளர்த்தவரே இங்கேயும் எனக்காய் காத்திருக்கும் இயேசுவை தலைகுணிந்து பணிந்து கொள்வேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalvaari Siluvaiyil Neer Sinthina Rattham Kan Munnae Otukindrathae Naan Kanmootikkontu Andha Kaalatthai Ninaikkaiyil En Aekkam Kootukindrathae Munnaalil Naan Seytha Paavatthinaalthaan Neer Marittheer Enru Unarnthaen Innaalil Naan Innum Ummotu Isainthida Ototi Vanthu Nirkiraen Paavatthirku Maritthu Neethikkup Pizhaitthu Nitthiyatthai Naan Ataiya Vaentum Enru Ninthaigalaich Sakittheer Siluvaiyaich Sumantheer Atthanaiyum Ninaikkinraen Naano Inru Aanaalum Neer Anru Thaanaaga Mun Vanthu Enai Meetka Maranthirunthaal Kaanaamal Poyiruppaen Veenaay Maritthiruppaen Aeno Neer Ennai Ninaittheer Tholvaligal Etukka Kaal Paadham Katukka Kalvaari Nokki Neer Natandha Pothu En Mugatthai Ninaittheer Ubatthiravam Poruttheer Uyir Pokum Varaiyilum Oppukkotuttheer Engko Pirandha Ennai Etuttherinthu Potaamal Uyir Kotutthu Valartthavarae Ingkaeyum Enakkaay Kaatthirukkum Yesuvai Thalaikuninthu Paninthu Kolvaen