பாடல் #43181
உதவி வரும் கண்மலையே
🎙 Pr. மோசஸ் சிவகுமார் • 💿 நான் கர்த்தருடையவன் சங்கீதங்கள்
Scale: E
Beat: 6/8
உதவி வரும் கண்மலையே உயிரோடு எழுந்தவரே உண்மையிலே உம்மைபோல தேவன் யாருண்டு கண்மனிபோல் காப்பவரே கைவிடாமல் மேய்ப்பவரே கர்த்தாவின் அன்பிற்கிணை ஈடு ஏதுண்டு-2 நீர் இல்லாத வாழ்க்கை ஒன்று உண்டா நீர் சொல்லாத வார்த்தை ஒன்று உண்டா-2 எந்தனுக்காய் உம்மை தந்த தேவா இருளிலிருந்து என்னை பிரித்த தேவா-2 தன்னந்தனிமையில் வாடும் போதினில் அருகில் வந்து என்னை அணைத்த அன்பு தெய்வமே உள்ளம் முழுவதும் உந்தன் அன்பினை ஊற்றி ஆற்றித் தேற்றி அரவணைத்த தெய்வமே மறுபடியும் பிறந்தேன் உமக்குள்ளே தானே மனமதையும் திறந்தேன் உமக்கென்று நானே-2 என் எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம் இயேசு நீரய்யா என் உள்ளமெல்லாம் உணர்வு எல்லாம் உமக்கு தானய்யா காலைப் பொழுதினில் கர்த்தர் கரத்தினில் என்னை இணைக்கும் போது எண்ணமெல்லாம் இனிக்குதே மாலை நேரத்தில் மறுபடி நேசரில் மனதை கொடுக்கும் போது மற்றதெல்லாம் மறக்குதே இயேசு இயேசு என்று என் இருதயம் துடிக்குதே பேசு பேசு என்று உள் உணர்வும் அடிக்குதே-2 ஒரு வார்த்தையிலே உம்மைப்பற்றி புகழ முடியுமா அந்த வானம் பூமி வந்தாலும் அளவு கொள்ளுமா ஆதி அந்தமும் ஆன தெய்வமே அடிமை என்னை கூட கிருபை கொண்டு பார்த்ததேன் பூமி முழுவதும் உமதாய் இருக்கையில் தேடி வந்து என்னை உம்மிடத்தில் சேர்த்ததேன் தாயும் தகப்பனுமாய் தயவு செய்த இயேசுவே தோளில் சுமந்து என்னை தூக்கி வளர்த்த நேசமே-2 வழி காட்டும் உந்தன் வலக்கரத்தில் அடங்கிருக்கனுமே முழங்கால் யாவும் உமக்கு முன்னால் முடங்கிருக்கனுமே