பாடல் #43177
உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்
🔤 Ummaalae Naan Oru Saenaikkul Paayvaen
🎙 Pr. மோசஸ் சிவகுமார் • 💿 நான் கர்த்தருடையவன் சங்கீதங்கள்
🎼 Scale: Gm
🥁 Beat: 2/4
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன் உம்மாலே நான் ஒரு மதிலைத்தாண்டுவேன் அநாதி தேவனே நீர் என் அடைக்கலம் நித்திய புயங்கள் எனக்கு ஆதாரம் உம்மைப் பற்றிக்கொள்வேனே உம்மைச் சார்ந்து கொள்வேனே உம்மைப் பின் தொடர்வேனே உம்மால் ஜெயம் பெறுவேனே போரடிப்பதற்கு புதிதும் கூர்மையும் பற்களுமுள்ள யந்தரமாகிறேன் மலைகளை நொறுக்க அரண்களை இடிக்க உம் கரம் இருக்க உலகை ஜெயிக்கிறேன் நான் இளைப்பதும் இல்லை ஓடி களைப்பதும் இல்லை சோர்வடைவதும் இல்லை எதற்கும் பயப்படவில்லை உன்னதமானவர் மறைவில் இருப்பேன் சர்வ வல்லவரின் நிழலில் தங்குவேன் வலுச்சர்ப்பங்களை தேள்களை மிதிப்பேன் பால சிங்கத்தையும் மிதித்துப் போடுவேன் பகல் வெய்யிலாகிலும் இரவின் நிலவாகிலும் சேதப்படுத்தாமலே என்னைக் காக்கிறவர் நீர் யுத்தத்தில் பட்டயத்தின் வெட்டுக்கு விலக்கி சத்துருவின் தலையை நசுக்கிப் போட்டவர் யுத்த சன்னத்தராய் யோர்தானைக் கடக்க புத்தம் புது பெலனை இன்னமும் ஊற்றுவீர் உந்தன் வலது கரம் என்னைப் பற்றிப் பிடிக்கும் உந்தன் அக்கினி மதில் என்னைச் சுற்றி இருக்கும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaalae Naan Oru Saenaikkul Paayvaen Ummaalae Naan Oru Mathilaitthaantuvaen Anaathi Devanae Neer En Ataikkalam Nitthiya Puyanggal Enakku Aathaaram Ummaip Parrikkolvaenae Ummaich Saarnthu Kolvaenae Ummaip Pin Thodarvaenae Ummaal Jeyam Peruvaenae Poratippatharku Puthithum Koormaiyum Parkalumulla Yandharamaakiraen Malaigalai Norukka Arankalai Itikka Um Karam Irukka Ulakai Jeyikkiraen Naan Ilaippathum Illai Oti Kalaippathum Illai Sorvataivathum Illai Edharkum Payappatavillai Unnathamaanavar Maraivil Iruppaen Sarva Vallavarin Nizhalil Thangkuvaen Valuccharppanggalai Thaelkalai Mithippaen Paala Singgatthaiyum Mithitthup Potuvaen Pakal Veyyilaakilum Iravin Nilavaakilum Saedhappatutthaamalae Ennaik Kaakkiravar Neer Yutthatthil Pattayatthin Vettukku Vilakki Satthuruvin Thalaiyai Nasukkip Pottavar Yuttha Sannattharaay Yorthaanaik Katakka Puttham Puthu Pelanai Innamum Oorruveer Undhan Valathu Karam Ennaip Parrip Pitikkum Undhan Akkini Mathil Ennaich Surri Irukkum