பாடல் #41332
ஒன்றான மெய் தேவனே
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
ஒன்றான மெய் தேவனே என்னை எந்நாளும் நடத்திடுமே உங்க கிருபையும் இரக்கமும் என்னைத் தாங்கிட உம் வார்த்தையும் சித்தமும் என்னில் நிறைவேறிட 1. ஆதாமுக்கு அயர்ந்த நித்திரை தந்து ஏற்றத் துணை தந்தீரே எலும்பில் எலும்பும் மாம்சத்தில் மாம்சமானாளே ஏவாளின் ஆசை ஆதாமைப் பற்றி இருந்ததே அதுபோல உம் ஆவியிலே நான் வாழ உம் ஆவியிலே நடத்த வேண்டுமே 2. எலிசா எலியாவின் வரம் வாங்கவே இருமடங்காகவே கில்காலிலிருந்து யோர்தான் வரை சென்றாரே எலிசாவின் ஆவி எலியாவை பற்றிக் கொண்டதே அதுபோல உம் ஆவியிலே நான் வாழ உம் ஆவியிலே நடத்த வேண்டுமே 3. ஒவ்வொரு நாளும் உம் பாதம் அமர்ந்து உம் வேதம் ருசித்து ஆவியில் நிறைந்து ஆவிக்குள்ளாகவே அனுதின கிருபை அடிமைக்குக் கிடைக்கவே உம்மோடு உம் ஆவியிலே நான் வாழ உம் ஆவியிலே நடத்த வேண்டுமே