பாடல் #40630
எந்தன் நேசர் இயேசு ஒருவரே
🔤 Endhan Naesar Yesu Oruvarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் நேசர் இயேசு ஒருவரே என் பாசத்துக்குரியவர் நீர் மட்டும் தானே உலகம் காட்டும் நண்பர் கூட்டம் ஒரு நாள் என்னை விட்டு பிரியும் என் தாயும் தகப்பன் காட்டும் நேசம் என்னை விட்டு அகன்று போகும் ஆனால் மாறாத மறையாத பிரியாத நேசர் அவர் மட்டும் தானே. அவர் மட்டும் தானே எந்தன் மனசே மனசே, எந்தன் மனசே மனசே உன் நேசர் இயேசு ஒருவரே எந்தன் உயிரே உயிரே, எந்தன் உயிரே உயிரே உனக்கெல்லாம் இயேசு ஒருவரே வாலிபம் மறையும், அதின் இன்பமெல்லாம் மறையும் பட்டம், பதவி, பணம், புகழ் எல்லாமும் மறையும். மறைந்து போகும் அன்புக்காக, மாறாத உம் நேசம் என் வாழ்வில் தொலைப்பேனோ ஓ ஓ ஓஹோ…. உயிர் போனாலும் தொலைக்கமாட்டேனே….( மனசே மனசே ) மாயையான உலகத்தில் உமதன்பு போதுமே உலகத்தின் அன்பும் ஆசைகள் எதுவும் வேண்டாமே எனதாசை நான் அழித்து உமதாசை நிறைவேற்றிட என்னை இன்று தந்தேனே ஏ ஏ ஏஹே… என் மணவாளன் நீர் அல்லவோ….( மனசே,மனசே) எந்தன் மணவாளனே, உம் மார்பில் சாய்ந்தே, உம்மோடு உறவாடுவேனே எந்தன் உயிரே உயிரே, உயிரில் கலந்த உறவே உம்மோடு தான் என்றும் இருப்பேன்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Naesar Yesu Oruvarae En Paasatthukkuriyavar Neer Mattum Thaanae Ulakam Kaattum Nanpar Koottam Oru Naal Ennai Vittu Piriyum En Thaayum Thakappan Kaattum Naesam Ennai Vittu Aganru Pokum Aanaal Maaraadha Maraiyaadha Piriyaadha Naesar Avar Mattum Thaanae. Avar Mattum Thaanae Endhan Manasae Manasae, Endhan Manasae Manasae Un Naesar Yesu Oruvarae Endhan Uyirae Uyirae, Endhan Uyirae Uyirae Unakkellaam Yesu Oruvarae Vaalibam Maraiyum, Athin Inbamellaam Maraiyum Pattam, Pathavi, Panam, Pugazh Ellaamum Maraiyum. Marainthu Pokum Anpukkaaga, Maaraadha Um Naesam En Vaazhvil Tholaippaeno O O Oho…. Uyir Ponaalum Tholaikkamaattaenae….( Manasae Manasae ) Maayaiyaana Ulakatthil Umathanpu Pothumae Ulakatthin Anpum Aasaigal Ethuvum Vaentaamae Enathaasai Naan Azhitthu Umathaasai Niraivaerrida Ennai Inru Thanthaenae Ae Ae Aehae… En Manavaalan Neer Allavo….( Manasae,manasae) Endhan Manavaalanae, Um Maarpil Saaynthae, Ummotu Uravaatuvaenae Endhan Uyirae Uyirae, Uyiril Kalandha Uravae Ummotu Thaan Enrum Iruppaen.