பாடல் #398
ஆதியாம் மகா ராஜனே எந்த வேளையும்
🔤 Aathiyaam Makaa Raajanae Endha Vaelaiyum
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆதியாம் மகா ராஜனே எந்த வேளையும் அடியனோடிரும் ரூடவ்சனே. தீதில்லா சருவேசா தேசுறும் பிரகாசா பாதகன் யான் மிகு பலவீனன் ஆனதால். 1. பாவி பெலனால் ஐயனே நின்றால் என்னைப் பகைவர் ஜெயிப்பார் மெய்யனே தேவா துணை நீர் ஐயனே சிறியனிடம் சேர்ந்தே வசியும் துய்யனே மேவும் தஞ்சம் எனக்கு வேண்டும் காவலன் நீரே சாவு வரையும் என்னைத் தாங்கி அரவணையும். 2. இரக்கம் பொழிய வாருமே கிருபையாக இறைவா என்னிடம் சேருமே உருக்கம் நிறைந்தநீருமே அனவரதம் உந்தன் அருளைத் தாருமே செருக்காய் என் மீதிகலோர் சேதம் செய்ய நினைக்கும் திருக்கை அகற்றி என்னில் தினமும் அருள் புரியும். 3. எந்தன் மரண மட்டுமே - அருகில் நீரே இருந்தால் மகா இஷ்டமே எந்த அகிதர் கெட்டுமே இமைப்பொழுதில் ஏகிப் போவார் திட்டமே தந்தை சுதன் நீரல்லால் தஞ்சம் வேறாரும் இல்லை விந்தை மேவும் கதியில் மேன்மையுடன் வாழ்கவே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aathiyaam Makaa Raajanae Endha Vaelaiyum Atiyanotirum Roodavsanae. Theethillaa Saruvaesaa Thaesurum Pirakaasaa Paadhakan Yaan Miku Palaveenan Aanathaal. 1. Paavi Pelanaal Aiyanae Ninraal Ennaip Pakaivar Jeyippaar Meyyanae Thaevaa Thunai Neer Aiyanae Siriyanidam Saernthae Vasiyum Thuyyanae Maevum Thanjjam Enakku Vaentum Kaavalan Neerae Saavu Varaiyum Ennaith Thaangki Aravanaiyum. 2. Irakkam Pozhiya Vaarumae Kirupaiyaaga Iraivaa Ennidam Saerumae Urukkam Niraindhaneerumae Anavaratham Undhan Arulaith Thaarumae Serukkaay En Meethigalor Saedham Seyya Ninaikkum Thirukkai Agarri Ennil Thinamum Arul Puriyum. 3. Endhan Marana Mattumae - Arukil Neerae Irunthaal Makaa Ishtamae Endha Akidhar Kettumae Imaippozhuthil Aekip Povaar Thittamae Thanthai Sudhan Neerallaal Thanjjam Vaeraarum Illai Vinthai Maevum Kathiyil Maenmaiyudan Vaazhkavae.