பாடல் #39377
சென்மமேதுக்குச் செபஞ்
🔤 Senmamaethukkuch Sebanj
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சென்மமேதுக்குச் செபஞ் செய்யாச் சென்ம மேதுக்குத் தவஞ் செய்யாச் சென்ம மேதுக்கு. 1. நன்மைப் பிரவாகர ஞானச் சொரூபத்தை யுண்மையினாலே யுணர்ந்து வணங்காத 2. வானம் புவியு மகிழ்ந்து படைத்த மெஞ் ஞானப் பிரகாசத்தி நன்றி யறியாத 3. தேடிப் பரா பரன் பாதத்தைச் சிந்தித்து நாடித் தினந் தினம் பாடித் துதியாத 4. எங்கும் நிறைந்த பரா பரனில்லை யென் றங்ககங் கொண்டெங்கு மலைந்து திரிகின்ற 5. இயாவு மறிந்து நடுத்தீர்க்க வல்லவோர் தேவனுண்டென்றுளஞ் சிந்தனை செய்யாத சென்ம 6. தன்னைப் படைத்த சருவேசுரன்றன்னை யுன்னி யுணர்ந்து வுகந்து கொண்டாடாத 7. மோசப் பிசாசை முழுவதும் நம்பியே யேசுவினா மத்தி லீடேற மாட்டாத 8. ஆவியினா லுண்மை யாலும ரூபியாஞ் சீவப் பிரானைத் தியானித்துப் போற்றாத 9. மோகக் கடலில் முழுகி மயங்கியே யேக பராபர வஸ்துவை யேத்தாத 10. உத்தம சத்திய வேதத்தினுண்மையைப் புத்தியினாற் கண்டு போற்றிக்கைக் கொள்ளாத 11. எத்தனை நீதிகள் வேதங்கள் கற்றாலும் பத்தியுந் தேவ பயமு மில்லாத வீண் 12. மாயப் பிசாசின் மருளற மெய் வேத நாயகன் பாடிய நாதனைத் தேடாத
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Senmamaethukkuch Sebanj Seyyaach Senma Maethukkuth Thavanj Seyyaach Senma Maethukku. 1. Nanmaip Piravaagara Njaanach Soroobatthai Yunmaiyinaalae Yunarnthu Vanangkaadha 2. Vaanam Puviyu Makizhnthu Pataittha Menj Njaanap Pirakaasatthi Nanri Yariyaadha 3. Thaetip Paraa Paran Paadhatthaich Sinthitthu Naatith Thinan Thinam Paatith Thuthiyaadha 4. Engkum Niraindha Paraa Paranillai Yen Ranggakang Kontengku Malainthu Thirikindra 5. Iyaavu Marinthu Natuttheerkka Vallavor Devanuntenrulanj Sindhanai Seyyaadha Senma 6. Thannaip Pataittha Saruvaesurandrannai Yunni Yunarnthu Vuganthu Kontaataadha 7. Mosap Pisaasai Muzhuvathum Nampiyae Yaesuvinaa Matthi Leetaera Maattaadha 8. Aaviyinaa Lunmai Yaaluma Roopiyaanj Seevap Piraanaith Thiyaanitthup Porraadha 9. Mogak Katalil Muzhuki Mayangkiyae Yaega Paraabara Vasthuvai Yaetthaadha 10. Utthama Satthiya Vaedhatthinunmaiyaip Putthiyinaar Kantu Porrikkaik Kollaadha 11. Etthanai Neethigal Vaedhanggal Karraalum Patthiyun Thaeva Payamu Millaadha Veen 12. Maayap Pisaasin Marulara Mey Vaedha Naayakan Paatiya Naadhanaith Thaetaadha