பாடல் #39364
எந்தாயிந் நேரம்
🔤 Enthaayin Naeram
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தாயிந் நேரம் இரட்சியும் பா ரம் தந்தைப் பராபரன்றன் விந்தைக் கிறிஸ்துவே. - எந் 1. பொன்னுலகத் திருந்திங் கிந் நிலத்தைப் புரக்கக் கன்னியு தரத்துற்ற சின்னத் தெய்வ குமாரா. - எந் 2. எத்தனை சோதனையோ சத்துருச் செய்யும் நிதம் பத்தனைக் கைவிடாதே சுத்தக் கிருபையே. - எந் 3. சிங்கங் கெர்ச்சிக்கும் போல வங்கைப் பிசாசு சீறு தெங்கும் புகல தில்லைச் சங்கைப் பராபரா. - எந் 4. துக்கக் கவலை யொரு மிக்கக் கெடக் கிருபை செய் உக்கிரப் பிசாசை வென்ற சக்கரக் கோர சங்காரா. - எந் 5. போதப் பகைஞர் செய்யும் வாதைப் படாமல் வந்தெப் போதைக்கும் உந்த நின்றிப் பேதைக் கிரக்கஞ் செய்யும். - எந் 6. ஆறுதலுன்னை யன்றி வேறொரு வஸ்து வெனும் பேறு பெறவெனக்குத் தேறுதல் சொல்லுமோ. - எந் 7. வேதநாயகன்றன் பாவா சாதிகட்கு இரங்கும் யோவா நீதியின்றவிது கோவா பாதுகாத்தருள் மெய்த் தேவா. - எந்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enthaayin Naeram Iratsiyum Paa Ram Thanthaip Paraabarandran Vinthaik Kiristhuvae. - En 1. Ponnulakath Thirunthing Kin Nilatthaip Purakkak Kanniyu Tharatthurtra Sinnath Theyva Kumaaraa. - En 2. Etthanai Sodhanaiyo Satthuruch Seyyum Nidham Patthanaik Kaivitaathae Sutthak Kirupaiyae. - En 3. Singgang Kerchsikkum Pola Vangkaip Pisaasu Seeru Thengkum Pugala Thillaich Sangkaip Paraabaraa. - En 4. Thukkak Kavalai Yoru Mikkak Kedak Kirupai Sey Ukkirap Pisaasai Vendra Sakkarak Kora Sangkaaraa. - En 5. Podhap Pakainjar Seyyum Vaathaip Pataamal Vanthep Pothaikkum Undha Ninrip Paethaik Kirakkanj Seyyum. - En 6. Aarudhalunnai Yanri Vaeroru Vasthu Venum Paeru Peravenakkuth Thaerudhal Sollumo. - En 7. Vaedhanaayakandran Paavaa Saathigatku Irangkum Yovaa Neethiyindravithu Kovaa Paathukaattharul Meyth Thaevaa. - En