பாடல் #39361
கல்லு மல்லவே காயம்
🔤 Kallu Mallavae Kaayam
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கல்லு மல்லவே காயம் வல்லுமல்லவே மனமே. வெள்ளி பொன் விலை மதியா மேரு மல்லவே அப்பா. - கல்லு 1. வல்லமை பேசாதே நாளை வருவதறியாய் ஆதால் நல்லவழி தேடித் தேவ நாமத்தைத் தியானி. - கல்லு 2. சூரியன் கீழ் கண்டதெல்லாம் மாயை யல்லவோ சால்மோன் பாரறியச் சொன்னதை நீ பார்த் தறியாயோ. - கல்லு 3. காற்றடித்த மேகம் புகைக் கொப்பதாகவே இங்கே போற்றிய மனுடர் ஜீவன் போயொழியுமே. - கல்லு 4. வேகமாய் வடியு மாற்றுக் கொப்பதாகவே மாயத் தேக நரர் நாட்களுஞ்சீக் கிரங்க ழியுமே. - கல்லு 5. இராப் பகலிருள் வெளிச்சம் மாறும் வண்ணமே ஐயோ நராட்களின் மகிழ்ச்சிக்குமா மாறுதலுண்டே. - கல்லு 6. பூ மலர் போலே விளங்கி பூ வதங்குமே அது போலவே நரருருவம் மாறி வதங்கும். - கல்லு 7. கொஞ்சநாள் செயஞ் சிறப்பான் பஞ்சை மனுடன் அவன் கொஞ்ச நோய் வந்தால் கிடப்பான் தொஞ்சு போவானே. - கல்லு 8. மேலது கீழ் கீழதுமே லாமுருளை போல் நரர் மேன்மையும் வாழ்வுங்கீழது மேலு மாகுமே. - கல்லு 9. பூவுலகின் மேன்மையென்ன மாதரித்திரன் போல யாவரும் வணங்கும் ராயன் சாவு மொக்குமே. - கல்லு 10. எத்தனை கற்றாலுமென்ன சுத்தப் பேதைக்குச்சரி யொத்தபடி செத்துப் போவான் முற்று மண்ணாவான். - கல்லு 11. நுன்னிமை ஞானியென்றாலும் கீர்த்தி பெற்றாலும் ஐயோ அன்னவன் மலையும் நேரம் யாவுங்கலையும். - கல்லு 12. வெள்ளச் சேதத்துக்கும் பல விக்கினத்துக்கும் பார் கொள்ளைக்கும் சடுதியிற் போம் கூட்டு மாஸ்தியே. - கல்லு 13. ஆசனந் துரைத்தனங்கள் தத்து வங்களும் அர சாண்ட மன்னரும் ஒரு நாள் மாண் டொழிவார்கள். - கல்லு 14. கொஞ்சநாள் மினுக்கும் நரரின் சிறப்புகள் செருக்கை வெஞ்சிறு பூச்சிகளரிக்கும் வீவழிக்குமே. - கல்லு 15. இயாவும் ஓட்டமாகப் பாயும் யாவுமழியும் மெய்த் தேவ பத்தியே கெலிக்கும் ஜீவனிலைக்கும். - கல்லு 16. நெல்லை வேதநாயகன் பா வென்றும் நிற்கும் போல் இனி நல்ல வரடையும் கதி நாமடைவோமே. - கல்லு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kallu Mallavae Kaayam Vallumallavae Manamae. Velli Pon Vilai Mathiyaa Maeru Mallavae Appaa. - Kallu 1. Vallamai Paesaathae Naalai Varuvathariyaay Aathaal Nallavazhi Thaetith Thaeva Naamatthaith Thiyaani. - Kallu 2. Sooriyan Keezh Kandathellaam Maayai Yallavo Saalmon Paarariyach Sonnathai Nee Paarth Thariyaayo. - Kallu 3. Kaartratittha Maegam Pukaik Koppathaagavae Ingkae Porriya Manudar Jeevan Poyozhiyumae. - Kallu 4. Vaegamaay Vatiyu Maarruk Koppathaagavae Maayath Thaega Narar Naatkalunjseek Kirangga Zhiyumae. - Kallu 5. Iraap Pakalirul Veliccham Maarum Vannamae Aiyo Naraatkalin Makizhchsikkumaa Maarudhaluntae. - Kallu 6. Poo Malar Polae Vilangki Poo Vathangkumae Athu Polavae Nararuruvam Maari Vathangkum. - Kallu 7. Konjjanaal Seyanj Sirappaan Panjsai Manudan Avan Konjja Noy Vanthaal Kidappaan Thonjsu Povaanae. - Kallu 8. Maelathu Keezh Keezhathumae Laamurulai Pol Narar Maenmaiyum Vaazhvungkeezhathu Maelu Maakumae. - Kallu 9. Poovulakin Maenmaiyenna Maadharitthiran Pola Yaavarum Vanangkum Raayan Saavu Mokkumae. - Kallu 10. Etthanai Karraalumenna Sutthap Paethaikkucchari Yotthapati Setthup Povaan Murru Mannaavaan. - Kallu 11. Nunnimai Njaaniyenraalum Keertthi Perraalum Aiyo Annavan Malaiyum Naeram Yaavunggalaiyum. - Kallu 12. Vellach Saedhatthukkum Pala Vikkinatthukkum Paar Kollaikkum Satuthiyir Pom Koottu Maasthiyae. - Kallu 13. Aasanan Thuraitthananggal Thatthu Vanggalum Ara Saanda Mannarum Oru Naal Maan Tozhivaarkal. - Kallu 14. Konjjanaal Minukkum Nararin Sirappugal Serukkai Venjsiru Poochsigalarikkum Veevazhikkumae. - Kallu 15. Iyaavum Ottamaagap Paayum Yaavumazhiyum Meyth Thaeva Patthiyae Kelikkum Jeevanilaikkum. - Kallu 16. Nellai Vaedhanaayakan Paa Venrum Nirkum Pol Ini Nalla Varataiyum Kathi Naamataivomae. - Kallu