பாடல் #3931
வாரும் பெத்லகேம்
🔤 Vaarum Pethlakaem
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1.வாரும், பெத்லகேம் வாரும் - வாரும், வரிசையுடனே வாரும்; வாரும், எல்லோரும் போய் வாழ்த்துவோம் யேசுவை, வாரும், விரைந்து வாரும். 2.எட்டி நடந்து வாரும் - அதோ ஏறிட்டு நீர் பாரும்; பட்டணம்போல் சிறு பெத்லகேம் தெரியுது, பாரும் மகிழ்ந்து பாரும். 3.ஆதியிலதமேவை - அந்நாள் அருந்திய பாவவினை; ஆ! திரித்துவ தேவன் மனிதத்துவ மாயினர், இது புதுமை! 4.விண்ணுலகாதிபதி, - தீர்க்கர் விளம்பின சொற்படிக்கு; மண்ணுலகில் மரிகன்னி வயிற்றினில் மானிடனா யுதித்தார். 5.சொல்லுதற் கரிதாமே, - ஜோதி சுந்தர சோபனமே; புல்லணையிற் பசுமுன்னணையிற்பதி பூபதிதான் பிறந்தார் 6.மந்தை மாடடையில் - மாது மரியவள் மடியதனில்; கந்தைத் துணியதை விந்தைத் திருமகன் காரணமாய் அணிந்தார். 7.தூதர் பறந்துவந்து - தேவ துந்துமி மகிழ்பாட; மாதவ ஞானிகள் ஆயர்கள் பணிந்து மங்களமொடு நாட.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1.vaarum, Pethlakaem Vaarum - Vaarum, Varisaiyudanae Vaarum; Vaarum, Ellorum Poy Vaazhtthuvom Yaesuvai, Vaarum, Virainthu Vaarum. 2.etti Natanthu Vaarum - Atho Aerittu Neer Paarum; Pattanampol Siru Pethlakaem Theriyuthu, Paarum Makizhnthu Paarum. 3.aathiyilathamaevai - Annaal Arunthiya Paavavinai; Aa! Thiritthuva Devan Manidhatthuva Maayinar, Ithu Puthumai! 4.vinnulakaathibathi, - Theerkkar Vilampina Sorpatikku; Mannulakil Mariganni Vayirrinil Maanidanaa Yuthitthaar. 5.solludhar Karithaamae, - Jothi Sundhara Sobanamae; Pullanaiyir Pasumunnanaiyirpathi Poobathithaan Piranthaar 6.manthai Maadataiyil - Maathu Mariyaval Matiyathanil; Kanthaith Thuniyathai Vinthaith Thirumakan Kaaranamaay Aninthaar. 7.thoodhar Paranthuvanthu - Thaeva Thunthumi Makizhpaada; Maadhava Njaanigal Aayarkal Paninthu Manggalamotu Naada.