பாடல் #39170
இஸ்திரி வித்தில் பிறந்த
🔤 Isthiri Vitthil Pirandha
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இஸ்திரி வித்தில் பிறந்த கிறிஸ்தன்பின் சாமி ஈசனே நேசனே பிரகாசனே சருவேசனே ஈசன் நேசன் பிரகாசன் சருவேசனே. சத்தியபதி துதிபதி நரபதி சுரபதி சருவதயாபதி தவிது பதியான நித்திய சங்கீத சங்கீர்த்தனங்களு முழங்கிய நீதிபதியேசு சக்ராதிபதி கிருபாநதியே. இஸ் 1.காத்திரப் பரமானந்த சூத்திரப்பாதாரவிந்த கருணை விளங்கிய ஞானேந்திரமே சாத்திரப் பொருள் விருத்தாந்த நேத்திரக்கிருபைகடேர்ந்த சத்திய வேதாந்த சொற்றிட்டாந்தரமே தோத்திரமுமக்கனந்த கீர்த்தனப் பிரதாபமேவத் துத்தியம் நீடூழி சதா நித்திய காலமுண்டாக பாத்திரமாக்கிக் கொள்ளும் விச்சேத்திரத் திரித்துவ தேவே பட்சமேயனந்தங் கோடிலட்சமே கடாட்சமே. 2. வானத்திருந்து வந்தக்கியானத்திருளகற்ற மரியகன்னி வயற்றிலே யுதித்தீர் ஞானத்திரவியனு பானத்தையுமருளி நன்மைத்திரு மறைகளையும் விதித்தீர் ஈனத்தலகை நரகானத்திலேகதற இத்தரையின் பாவங்களெச் சத்துருக்களும் சிதற கோனத்தியத்தவீது தானத்திலங்கு மனு கூலனே கருணை மனுவேலனே செங்கோலனே. 3. அழியுமகில புவனமு மதிலுளதுமே அரிய வலமை பெருமையுமதி வளமையும் ஒழியும் உலையும் குலையும் நொடியில் மாயமாய் உயர்ச்சி புகழ்ச்சியோ அனித்யமானதே வழியு முயர் துணைக்குன் பாதமும் நேசிக்க வலிய பாதகனுக்கு மனதுருகுவையே பொழியும் கவிப்படிக்கு வேதநாயகன் மேல் பூரிப்பாக வாரிப் பலன் கொடுக்கும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Isthiri Vitthil Pirandha Kiristhanpin Saami Eesanae Naesanae Pirakaasanae Saruvaesanae Eesan Naesan Pirakaasan Saruvaesanae. Satthiyapathi Thuthibathi Narapathi Surapathi Saruvathayaabathi Thavithu Pathiyaana Nitthiya Sangkeedha Sangkeertthananggalu Muzhangkiya Neethibathiyaesu Sakraathibathi Kirupaanathiyae. Is 1.kaatthirap Paramaanandha Sootthirappaathaaravindha Karunai Vilangkiya Njaanaenthiramae Saatthirap Porul Virutthaandha Naetthirakkirupaigataerndha Satthiya Vaethaandha Sorrittaandharamae Thotthiramumakkanandha Keertthanap Pirathaabamaevath Thutthiyam Neetoozhi Sathaa Nitthiya Kaalamuntaaga Paatthiramaakkik Kollum Vichsaetthirath Thiritthuva Thaevae Patsamaeyanandhang Kotilatsamae Kataatsamae. 2. Vaanatthirunthu Vandhakkiyaanatthirulakartra Mariyakanni Vayarrilae Yuthittheer Njaanatthiraviyanu Paanatthaiyumaruli Nanmaitthiru Maraigalaiyum Vithittheer Eenatthalakai Narakaanatthilaegathara Ittharaiyin Paavanggalech Satthurukkalum Sidhara Konatthiyatthaveethu Thaanatthilangku Manu Koolanae Karunai Manuvaelanae Sengkolanae. 3. Azhiyumakila Puvanamu Mathilulathumae Ariya Valamai Perumaiyumathi Valamaiyum Ozhiyum Ulaiyum Kulaiyum Notiyil Maayamaay Uyarchsi Pugazhchsiyo Anithyamaanathae Vazhiyu Muyar Thunaikkun Paadhamum Naesikka Valiya Paadhakanukku Manathurukuvaiyae Pozhiyum Kavippatikku Vaedhanaayakan Mael Poorippaaga Vaarip Palan Kotukkum.