பாடல் #39163
பாத சேவடி மன்றாடி
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
பாத சேவடி மன்றாடிக் கொண்டாடித் துதிபாடித் தேடி வந்தோம் பாதசேவடி நம்பினோந் தேவரீர் திருப் பாதசேவடி 1.ஆதிதனிமுதலோதும் நெறிவழி யன்னைபுரி பாதகத்தினாலே யுயர் மன்னவன்றவிதுட செங்கோலே யொரு கன்னியாஸ்திரியினிட முன்னணையின்மேவுதிரு. 2. வானசுரர் நவசேனையணியுடன் மங்கள சங்கீர்த்தனங்கள் சாற்ற ஆயர் கங்குலில் வந்தடி பணிந்தேற்ற பசுந் தங்கமுந்தூ பமிறாக் கொண் டிங்கிதத் தறிஞர் தொழும். 3. ஓசன்னாயிரட்சியுமே சுகர்த்தாவே உன்னதத்திலே மகிமையாக நரர் தன்னிலதிபிரிய சினேக முற இன்னிலத்திற் சமாதானம் என்னதிசய முனது. 4. வேதநாயகன் பாடற்கருள் தயாப மேசியாயேசுக் கிறிஸ்து நாதா கெட்ட பாதகரை மீட்கவந்த நீதா கொடு மாதி சர்ப்பத்தின் சிரத்தை வாதையுறவே மிதித்த.