பாடல் #39152
மனமே ஓவுன்னதம்
🔤 Manamae Ovunnatham
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மனமே ஓவுன்னதம் மறை தந்தவனே வந்தனர் கனமிகுந்த திருக்குமாரன் கருணையாய் நரருருவமாகினார். 1.ஆதிசர்ப்பத்தின் தலையையுடைக்க அகிலத்தின் பவமனைத்துந் துடைக்க வேதமறையினூடு சிறந்த மேசியா பிறந்தார். 2. ஆகனமிகும் மகிமைத் தேவனார் யாவருக்கும் அருள்செய மேவினார் ஏகமுதல்வனா மொரு வஸ்து இயேசு ராஜ கிறிஸ்து. 3. நானிலத்தின ராள் பிழைக்கவே ஞான நன்மை களே தழைக்கவே வான ராட்சியஞ் சேர்ந்து வந்தது மானுவேல் பிறந்தார். 4. நாம் நடத்தியபடி செய்யாமல் நம்முட மேலுக்கிரம் வையாமல் ஆ மகத்துவமே கதித்தவ னாதி யானுதித்தார். 5. நாதனார் மனுவாய் வந்திருக்க வேதநாயகன் பதங்கள் பெருக்க நமக்கிப் போது கவலையேது நாம கீர்த்தன மோது.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manamae Ovunnatham Marai Thandhavanae Vandhanar Kanamikundha Thirukkumaaran Karunaiyaay Nararuruvamaakinaar. 1.aathisarppatthin Thalaiyaiyutaikka Akilatthin Pavamanaitthun Thutaikka Vaedhamaraiyinootu Sirandha Maesiyaa Piranthaar. 2. Aaganamikum Makimaith Devanaar Yaavarukkum Arulseya Maevinaar Aegamudhalvanaa Moru Vasthu Yesu Raaja Kiristhu. 3. Naanilatthina Raal Pizhaikkavae Njaana Nanmai Kalae Thazhaikkavae Vaana Raatsiyanj Saernthu Vandhathu Maanuvael Piranthaar. 4. Naam Natatthiyapati Seyyaamal Nammuda Maelukkiram Vaiyaamal Aa Makatthuvamae Kathitthava Naathi Yaanuthitthaar. 5. Naadhanaar Manuvaay Vanthirukka Vaedhanaayakan Pathanggal Perukka Namakkip Pothu Kavalaiyaethu Naama Keertthana Mothu.