பாடல் #39101
பரநர புத்திர ரான சாமி
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
பரநர புத்திர ரான சாமி உருத்தி னென்னாற்றும நன் னேய நாயகா. 1.சங்கையின் அரசே துங்கவர் சிரசே இங்கெனின் பவமோ எழுந்த திக்குருசே. 2. தவிது செங் கோலே தழைக்கவன் பாலே பவநர னெனப்பா டுறு மணு வேலே. 3. வாரதி னடி யோ வாதை முண் முடியோ பா ரதிலடியேன் பாவ மிப்படியோ. 4. வருத்து சஞ்சலமோ மனவியாகுலமோ மகத்துவ தெய்வமே மடித்த தென்னலமோ. 5. வஞ்சகன் எனையே மருள் செய் வல்வினையே அஞ்ச வந்துனையே அளித் தருளினையே. 6. மெத்த விதனமே விளைத்ததுன் சனமே பத்தனுற் பனமே பாதம் வந்தனமே. 7. தேடு முச்சிதமே தேவ அற்புதமே நாடிய வேத நாயகன் பதமே.