பாடல் #3897
வானராச்சியம் வந்ததோ கோகோ
🔤 Vaanaraachsiyam Vandhatho Koko
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானராச்சியம் வந்ததோ கோகோ! மாந்தரே தவம்செய்யும் ஓ கோகோ! ஆன சாட்சி தியானசூட்சி மெய்ஞ் ஞான காட்சியர் தோன்றினார்.- வான 1.மன்னவன் கிறிஸ்தாதிபன் வந்தார் வாகுறப் பவமே ஒழிந்திடவே குணப்படுவீர்களே என்னிலும் பெரியார் வலியார் அவர் இந்நிலத்திடை மேவினார் உயர் உன்னதக் கிருபை ஆழமே.- வான 2.பிந்தி வந்தவர் முந்தி இருந்தவர் பேசரும் பொருளார் பரம்பர நேசர் நம் கருணாம்பரர் சுந்தரப் பரிபூரணர் காரணர் ஜோதிசொந்த அனாதி மைந்தன் இம் மாதிரந்தனில் மேவினார்.- வான 3.அண்ணலார் பாத ரட்சையின் வாரையே அவிழ்க்க வாய்மையில் எடுக்க அல்லது சுமக்கப் பாத்திரன் அல்ல நான் திண்ணம் என் முழுக்கோ ஜலத்தீர்த்தமே தீயினாலும் அரூபியாலும் ஸ்நானமே அவர் ஈகுவார்.- வான 4.மரத்தின் வேர் அருகே முன் கோடாலியும் வைத்திருக்குது பத்திரத்துடன் எச்சரிக்கை விடாதேயும் வரத்தில் நற்கனி தான் தருகாத் தரு வைத்திடக் கிட வெட்டி மிக்கழல் அக்கினிக்கிரையாக்குவார்.- வான 5.தூற்றுக்கூடை கரத்தில் இருக்குது துறையினில் தமதுரிய நற்களம் அற விளக்கி அறுதியிலே தேற்றக் கோதுமை கேயத்தில் சேர்த்துமே தீயதுர்ப்பதர் ஆனதைத் தழலால் எரிப்பர் இன்னேரமே.- வான
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanaraachsiyam Vandhatho Koko! Maandharae Thavamseyyum O Koko! Aana Saatsi Thiyaanasootsi Meynj Njaana Kaatsiyar Thonrinaar.- Vaana 1.mannavan Kiristhaathiban Vanthaar Vaakurap Pavamae Ozhinthidavae Kunappatuveerkalae Ennilum Periyaar Valiyaar Avar Innilatthitai Maevinaar Uyar Unnathak Kirupai Aazhamae.- Vaana 2.pinthi Vandhavar Munthi Irundhavar Paesarum Porulaar Parambara Naesar Nam Karunaambarar Sundharap Paripooranar Kaaranar Jothisondha Anaathi Maindhan Im Maathirandhanil Maevinaar.- Vaana 3.annalaar Paadha Ratsaiyin Vaaraiyae Avizhkka Vaaymaiyil Etukka Allathu Sumakkap Paatthiran Alla Naan Thinnam En Muzhukko Jalattheertthamae Theeyinaalum Aroopiyaalum Snaanamae Avar Eekuvaar.- Vaana 4.maratthin Vaer Arukae Mun Kotaaliyum Vaitthirukkuthu Patthiratthudan Eccharikkai Vitaathaeyum Varatthil Narkani Thaan Tharukaath Tharu Vaitthidak Kida Vetti Mikkazhal Akkinikkiraiyaakkuvaar.- Vaana 5.thoorrukkootai Karatthil Irukkuthu Thuraiyinil Thamathuriya Narkalam Ara Vilakki Aruthiyilae Thaertrak Kothumai Kaeyatthil Saertthumae Theeyathurppathar Aanathaith Thazhalaal Erippar Innaeramae.- Vaana