பாடல் #38451
இல்லத்தின் தலைவராய்
🔤 Illatthin Thalaivaraay
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இல்லத்தின் தலைவராய் இயேசு இருக்கிறார் உள்ளத்தின் நேயராய் யாவும் கேட்கிறார் மறைவான விருந்தினராய் தினமும் வருகின்றார் குடும்பத்தின் குறைகள் யாவும் அறிகிறார் அள்ளி அணைப்பதில் அன்னையாகுவார் அடித்து திருத்திடும் நல் தந்தையாகுவார் ஆபத்துக் காலத்தில் தோழனாகுவார் வறுமை நேரத்திலே வள்ளலாகுவார் துன்பங்கள் வரும்போது ஆறுதலாவார் தனிமையிலே தியங்கும் போது துணையவராகுவார் காரிருளே சூழும்போது ஜோதி ஆகுவார் கலங்கும் எந்தன் பாதையிலே காவலன் ஆவார் இயேசு வந்த இல்லத்திலே சந்தோஷம் உண்டு எல்லாவற்றிலேயும் அங்கு ஸ்தோத்திரம் உண்டு இடைவிடாமல் ஏறெடுக்கும் ஜெபங்களும் உண்டு ஆவியிலே நிறைந்திருக்கும் அனுபவம் உண்டு கண்ணீர் யாவையும் துடைத்திடுவாரே கணப்பொழுதிலே மறு ரூபம் ஈவாரே கர்த்தரோடு சேர்ந்து நானும் பறந்திடுவேனே கர்த்தரையே பாடி தினமும் மகிழ்ந்திடுவேனே வியாதிப் படுக்கையில் வைத்தியனாவாரே வேதனைக் கண்டு மனம் உருகிடுவாரே காயங்களால் எந்தன் நோயைத் தீர்த்திடுவாரே கவலையற்ற வாழ்வை எனக்கு அளித்திடுவாரே மேகத்தின் மேல் இதோ இயேசு வருகிறார் கணப்பொழுதில் மரித்தோர்கள் மீண்டும் எழும்புவார்கள் கர்த்தரோடு நாமும் அன்று ஆகாயம் செல்வோம் கண்ணீர் யாவும் மறந்து அவரில் ஆனந்தம் கொள்வோம் பரமானந்தம் கொள்வோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Illatthin Thalaivaraay Yesu Irukkiraar Ullatthin Naeyaraay Yaavum Kaetkiraar Maraivaana Virunthinaraay Thinamum Varukinraar Kutumbatthin Kuraigal Yaavum Arikiraar Alli Anaippathil Annaiyaakuvaar Atitthu Thirutthitum Nal Thanthaiyaakuvaar Aabatthuk Kaalatthil Thozhanaakuvaar Varumai Naeratthilae Vallalaakuvaar Thunbanggal Varumpothu Aarudhalaavaar Thanimaiyilae Thiyangkum Pothu Thunaiyavaraakuvaar Kaarirulae Soozhumpothu Jothi Aakuvaar Kalangkum Endhan Paathaiyilae Kaavalan Aavaar Yesu Vandha Illatthilae Santhosham Untu Ellaavarrilaeyum Angku Sthotthiram Untu Itaivitaamal Aeretukkum Jebanggalum Untu Aaviyilae Nirainthirukkum Anubavam Untu Kanneer Yaavaiyum Thutaitthituvaarae Kanappozhuthilae Maru Roobam Eevaarae Karttharotu Saernthu Naanum Paranthituvaenae Karttharaiyae Paati Thinamum Makizhnthituvaenae Viyaathip Patukkaiyil Vaitthiyanaavaarae Vaedhanaik Kantu Manam Urukituvaarae Kaayanggalaal Endhan Noyaith Theertthituvaarae Kavalaiyartra Vaazhvai Enakku Alitthituvaarae Maegatthin Mael Itho Yesu Varukiraar Kanappozhuthil Maritthorkal Meentum Ezhumpuvaarkal Karttharotu Naamum Anru Aakaayam Selvom Kanneer Yaavum Maranthu Avaril Aanandham Kolvom Paramaanandham Kolvom