பாடல் #38409
கர்த்தர் இரக்கமும்
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
கர்த்தர் இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுள்ளவர் என்றென்றும் எப்பொழுதும் இயேசுவை சார்ந்து நில்லு இன்பதுன்ப நேரத்தில் என் உள்ளமே சத்ருசேனை உன்மேல் எத்தனையோவிதமாய் நித்தம் பகைத்து பழிகூறி அலையும் போது சத்ருசேனை மத்தியில் ஜெயக்கீதம் பாடி நில்லு இன்பதுன்ப நேரத்தில் என்னுள்ளமே ஓங்கி வளரும்போது உள்ளிருந்து குத்தும் முள்கள் உன் விசுவாசமலர் மங்கி மடியும்போது என் கிருபைபோதும் என்ற இயேசுவின் வாக்கை நம்பு இன்பதுன்ப நேரத்தில் என்னுள்ளமே கடும்நோயால் ஜீவன் கசப்பாக மாறினும் சாவை விரும்பி நீ சஞ்சலமாகையில் விசுவாசத்தால் வென்றேகிபார் இயேசுவை இன்பதுன்ப நேரத்தில் என்னுள்ளமே இரவில் நித்திரையின்றி அலறினேன் ஆந்தைபோல் கண்ணீரால் கட்டிலை நனைத்து அழுதேன் காலைத் தள்ளாட வொட்டார் காக்கிறவர் உறங்கார் என்று மகிழ்ந்துபாடு என்னுள்ளமே பெலவீனத்தால் தள்ளாடி மெய்மறந்தசைந்தேன் பெரும் நஷ்டம் மோதி என்னை சிக்கி சிதைத்தது எதிர்த்தேன் சாத்தானை இயேசுவின் நாமத்தில் என் அப்பா இயேசுவே நீர் போதும் என்றேன் சாத்தான் தந்திரவலை என்மேல் வீசினான் சத்தியபாதை விட்டு விலகப்போராடினான் எதிர்த்தேன் அவர் நாமத்தில் இன்பஜெயம் எடுத்தேன் இதுவேபேர் அதிசயம் என்னுள்ளமே