பாடல் #363
ஆண்டவரின் நாமமதை
🔤 Aandavarin Naamamathai
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆண்டவரின் நாமமதை ஈண்டு போற்றுவேன் – அவர் ஆளுகையின் நீதி அன்பின் வழி சாற்றுவேன் உத்தம வழியில் நிதம் புத்தி கொள்ளுவேன் – மன உண்மையுடன் வாழ்ந்து தீய கன்மம் தள்ளுவேன் கெட்ட விஷயங்கள் எனை ஒட்டுவதில்லை – மதி கேடரின் புரளிகளும் கிட்டுவதில்லை வஞ்சகங்களை உகக்கும் நெஞ்சை நீக்குவேன் – பொல்லா மார்க்கங்களிலே நடக்கும் தீர்க்கம் போக்குவேன் மற்றவனை யேசி வாயால் குற்றங்கள் செய்யும் – துஷ்ட மாந்தர் மேலே பற்றாமலென் பாந்தவம் நையும் பொய்யர்களை என்னுடன் உய்ய ஒட்டேனே – மகா புரளிசெய்யும் எத்தர்களின் திரளில் கிட்டேனே சீருடையோர் பேரில் அன்பு கூருவேனே – நல்ல சீரொழுகு சான்றோர் தயை சேருவேனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aandavarin Naamamathai Eentu Porruvaen – Avar Aalukaiyin Neethi Anpin Vazhi Saarruvaen Utthama Vazhiyil Nidham Putthi Kolluvaen – Mana Unmaiyudan Vaazhnthu Theeya Kanmam Thalluvaen Ketta Vishayanggal Enai Ottuvathillai – Mathi Kaedarin Puraligalum Kittuvathillai Vanjjakanggalai Ugakkum Nenjsai Neekkuvaen – Pollaa Maarkkanggalilae Natakkum Theerkkam Pokkuvaen Martravanai Yaesi Vaayaal Kurtranggal Seyyum – Thushta Maandhar Maelae Parraamalen Paandhavam Naiyum Poyyarkalai Ennudan Uyya Ottaenae – Makaa Puraliseyyum Ettharkalin Thiralil Kittaenae Seerutaiyaeாr Paeril Anpu Kooruvaenae – Nalla Seerozhuku Saanror Thayai Saeruvaenae