பாடல் #35944
தனிமையிலும் முதுமையிலும்
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
தனிமையிலும் முதுமையிலும் வருவதிந்த சோகம் நரைவிழுந்த போதினிலே அழுது என்ன லாபம் நான் சுமப்பேன் உன்னை தாங்கிடுவேன் நான் சுமப்பேன் உன்னை ஆதரிப்பேன்-தனிமை 1. பச்சைமரம் கனிகொடுத்தால் பறவை வந்து கூடும் பட்டமரம் காய்ந்திருந்தால் யாருக்கது லாபம் பணம் இருந்தால் பலம் இருந்தால் சொந்தம் பந்தம் வந்து சேரும் தனிமையிலே இளமைதனை நினைத்து என்ன நேரும் 2. காலையிலே மலரும் மலர் மாலைதோறும் வாடும் இளமைதனின் அழகும் பெலனும் கதையை போல முடியும் மண்ணில் வந்த மானிடர்க்கு மரணம் வந்து நேரும் மகிமையான இயேசுவை நீ ஏற்றுக்கொண்டல் போதும் 3. பெற்றெடுத்த பிள்ளைகளும் ஒதுக்கி தள்ளும் நேரம் உற்றவரும் உறவினரும் தொல்லை என்னும் காலம் கையிருந்தும் கா-ருந்தும் உதவவில்லை ஏதும் கண்களிலே விழியிருந்தும் இருள் நிறைந்த நேரம்