பாடல் #35939
உமது சமூகம் வரும்போதெல்லாம்
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
உமது சமூகம் வரும்போதெல்லாம் என் உள்ளமெல்லாம் மகிழுதைய்யா நன்றி என்று சொல்லுதைய்யா - என் நம்பிக்கையும் பெருகுதைய்யா 1. பாவியாக (பிறந்து) இருந்த என்னை பாசத்துடன் தேடிவந்து இரத்தத்தாலே மீட்டுக்கொண்டீரே - உந்தன் இரட்சிப்பினால் அலங்கரித்தீரே நன்றி.... உமக்கு நன்றி - 2 2. உள்ளம் உடைந்து அழுதபோது உருக்கமாக அருகில் வந்து அன்பினாலே அணைத்துக்கொண்டீரே - என்னில் ஆறுதலை பெருகச்செய்தீரே நன்றி..... உமக்கு நன்றி - 2 3. தனிமை என்னை தாக்கும் நேரம் தள்ளாடி நடந்தவேளை தோள்மீது சுமந்துவந்தீரே - என் துணையாக (நிழலாக) மாறிவிட்டீரே நன்றி.... உமக்கு நன்றி - 2 4. கவலை கண்ணீர் பெருகும் போது காரிருளும் சூழ்ந்தபோது வெளிச்சமாக அருகில் வந்தீரே - என்னில் விசுவாசம் பெருகச்செய்தீரே நன்றி.... உமக்கு நன்றி - 2