பாடல் #35620
தாயும் நீயே தந்தையும் நீயே
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
தாயும் நீயே தந்தையும் நீயே நல்ல சிநேகிதனே தன்னை தந்து என்னை மீட்ட எனது மணவாளனே 1. உலகம் வெறுக்கும் உறவு கசக்கும் தனிமை தவிக்க விடும் உமது வசனம் என் தியானம் என்றும் இனிமை தரும் கலங்கிடாமல் தாங்கிடாமல் உமது பாதம் பின் தொடர்வேன் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் அல்லேலூயா- தாயும் 2. சர்வ வல்லவரே சந்தோஷத்துடன் விண்ணப்பம் பொருத்தனை செலுத்திடுவேன் தம்மை தாமே பலியிட்டதாலே பூரணரானவரே போகும் வழியை அறிந்தவரென்னை சோதித்தபின் பொன்னாய் விளங்கிடுவேன் 3. மாசில்லாதவர் குற்றமில்லாதவர் வானங்களில் உயர்ந்தவர் உம்மை எங்கே கண்டு சந்திப்போன் என்பதறிந்தால் நலமல்லவா மாறிபோகாதென்றென்றும் நிலைக்கும் ஆசார்யரானவரே பிரதான 4. உத்தர மண்டலம் வெட்ட வெளியிலே விரித்து பூமியை தொங்கவிடுவார் உன்னத சீயோன் எனக்களித்திடவே இறங்கி வந்திடுவார் மண்ணின் சாயல் மண்ணுக்குள் வீசி விண்ணவரோடு பறந்திடுவேன் - தாயும்