பாடல் #3559
மனம் திரும்பாயோ மானிடனே
🎙 Pr. ஜான் பாலா • 💿 என்னை ஆட்கொண்ட இயேசு
மனம் திரும்பாயோ மானிடனே, இந்த மாய உலகின் பாவம் மறந்து... - 2 மனுக்குலத்தை மீட்க வந்த, மீட்பர் இயேசுவின் அன்பறிந்து கண்மூடிக் கருவினிலே உருவாகும் நேரத்திலே உன்தாயும் உன்னை காண நேரத்திலே... - 2 அவயம் ஒவ்வொன்றும் உறுவேற்றப்படும்போது அவயம் தந்தவரை அவனியில் நீர் அறிந்து பட்டம் படிப்புகளும் சேர்த்த பணம் பொருளும் உன்னோடு வருவதில்லை மரிக்கும் நேரத்திலே... - 2 இரட்சிப்பு ஒன்றிருந்தால் இரட்சகரை நீ காண்பாய் இன்றே இரட்சண்ய நாள் உணர்ந்து மனம் திரும்பு நோயின் கொடுமையினால் கைகால்கள் செயலிழந்தால் உன் கண்ணில் கண்ணீரை யார் தான் அறிவாரோ... - 2 கண்ணீரைக் கண்டவரும் கரத்தில் வரைந்தவரும் இன்று உன்னை அழைக்கின்றார் அவரிடம் வந்துவிடு