பாடல் #35544
நான்தேடும்போது அருகிலிருக்கும்
🔤 Naanthaetumpothu Arukilirukkum
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான்தேடும்போது அருகிலிருக்கும் ஆண்டவர் என்னைத்தேடி வந்து சிலுவை மரத்தில் மாண்டவர் என்னைத்தேடி வந்ததால் வன்சிலுவை சுமந்ததால் - ஒரு தாயைப் போல அன்பு காட்டி அரவணைத்தவர் - அந்த பேய் வாயிலகப்படாமல் என்னைத் தடுத்தவர் 1. மாயலோக வாழ்வை நம்பி மாண்டிடாமல் என்னைக் காத்தவர் ஆயனாகி ஆட்டைப்போல் - தம் கோலினாலே என்னை மேய்த்தவர் - அடி காயம் ஆற்றியே குணமாக்கும் தேவனே தீயன் எந்தன் தீமை யாவும் சிலுவை மீதிலே பாய்ந்து ஓடும் உதிரத்தாலே தீர்த்த நாதனே 2. இறைவன் பாதம் நாடிதேடி உலகம் இன்று ஓடும்போதிலே குறைகள் யாவும் நிறைவாக்கிட எம்மைத் தேடி வந்த தேவனே விடி காலை கிருபைகள் புதிதாக வழங்கினீர் வாடி வதங்கும் பயிர்களாகி மாய்ந்திடாமலே - ஒரு செடியில் இணைந்த கொடிகளாகி கனிகள் வழங்கவே - நான் 3. துருகமாகி நீதிமானை காக்கும் நல்ல நீதி தேவனே - ஒரு மிருகம் போல வாழ்ந்த என்னை மனிதனாக்கி மகிழும் தேவனே எனக்காக யாவையும் செய்து முடிக்கும் ஆண்டவா ஜீவன் இருக்கும் நாட்கள் வரையில் உமக்குள் ஜீவிப்பேன் - என் ஜீவனுள்ள தேவனே நீர் விரைந்து வாருமே - நான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naanthaetumpothu Arukilirukkum Aandavar Ennaitthaeti Vanthu Siluvai Maratthil Maandavar Ennaitthaeti Vandhathaal Vansiluvai Sumandhathaal - Oru Thaayaip Pola Anpu Kaatti Aravanaitthavar - Andha Paey Vaayilakappataamal Ennaith Thatutthavar 1. Maayaloga Vaazhvai Nampi Maantitaamal Ennaik Kaatthavar Aayanaaki Aattaippol - Tham Kolinaalae Ennai Maeytthavar - Ati Kaayam Aarriyae Kunamaakkum Devanae Theeyan Endhan Theemai Yaavum Siluvai Meethilae Paaynthu Otum Uthiratthaalae Theerttha Naadhanae 2. Iraivan Paadham Naatithaeti Ulakam Inru Otumpothilae Kuraigal Yaavum Niraivaakkida Emmaith Thaeti Vandha Devanae Viti Kaalai Kirupaigal Puthithaaga Vazhangkineer Vaati Vathangkum Payirkalaaki Maaynthitaamalae - Oru Setiyil Inaindha Kotigalaaki Kanigal Vazhanggavae - Naan 3. Thurugamaaki Neethimaanai Kaakkum Nalla Neethi Devanae - Oru Mirugam Pola Vaazhndha Ennai Manidhanaakki Makizhum Devanae Enakkaaga Yaavaiyum Seythu Mutikkum Aandavaa Jeevan Irukkum Naatkal Varaiyil Umakkul Jeevippaen - En Jeevanulla Devanae Neer Virainthu Vaarumae - Naan