பாடல் #35543
சொந்தம் என்று சொல்லிக்கொள்ள
🔤 Sondham Enru Sollikkolla
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சொந்தம் என்று சொல்லிக்கொள்ள ஒன்றும் இல்லை என்று சொல்லி வந்ததெல்லாம் வரவில் வைத்தேன் - எந்தன் சொந்தம் என்று சொல்லிக்கொண்டு வந்த சிலர் அள்ளிக்கொண்டு சென்றதெல்லாம் செலவில் வைத்தேன் இதுவும் மாயைதான் அதுவும் மாயைதான் எல்லாம் மாயைதான் என்று கண்டுக்கொண்டேன் கதிரவன் கீழொரு தீங்கு கண்டேன் மனிதரின் மீதது பரவக்கண்டேன் ஒருவன் விதைக்க மற்றவன் அறுக்க ஒருவன் உழைக்க யாரோ பிழைக்க மனதுக்குள் சஞ்சலங்கள் பெருகக் கண்டேன்- சொந்தம் சூரியன் கீழொரு ஸ்தலத்தைக் கண்டேன் நீதி ஸ்தலத்திலே அநீதி கண்டேன் முன்பு நடந்ததே இன்றும் நடந்ததே பின்பு நடப்பதும் ன்பு நடந்ததே தேவனின் செயல் மட்டும் நிலைக்க கண்டேன் - சொந்தம் ஞாயிறு ஒளியினில் அழகு கண்டேன் படைத்தவர் படைப்பினில் மிளிரக் கண்டேன் மகிழ்ந்திருப்பதும் நன்மைகள் செய்வதும் பலன் பெறுவதும் தேவ அநுக்கிரகம் அத்தனையும் நியாயம் என்று அறிந்துக் கொண்டேன் - சொந்தம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sondham Enru Sollikkolla Onrum Illai Enru Solli Vandhathellaam Varavil Vaitthaen - Endhan Sondham Enru Sollikkontu Vandha Silar Allikkontu Sendrathellaam Selavil Vaitthaen Ithuvum Maayaithaan Athuvum Maayaithaan Ellaam Maayaithaan Enru Kantukkontaen Kathiravan Keezhoru Theengku Kantaen Manidharin Meedhathu Paravakkantaen Oruvan Vithaikka Martravan Arukka Oruvan Uzhaikka Yaaro Pizhaikka Manathukkul Sanjjalanggal Perugak Kantaen- Sondham Sooriyan Keezhoru Sthalatthaik Kantaen Neethi Sthalatthilae Aneethi Kantaen Munpu Natandhathae Inrum Natandhathae Pinpu Natappathum Npu Natandhathae Devanin Seyal Mattum Nilaikka Kantaen - Sondham Njaayiru Oliyinil Azhaku Kantaen Pataitthavar Pataippinil Milirak Kantaen Makizhnthiruppathum Nanmaigal Seyvathum Palan Peruvathum Thaeva Anukkirakam Atthanaiyum Niyaayam Enru Arinthuk Kontaen - Sondham