பாடல் #35458
கோமகனார் குமாரன் கொற்றவன்
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
கோமகனார் குமாரன் கொற்றவன் கிறிஸ்துவுக்கு கோடான கோடி, ஸ்தோத்திரம் கிறிஸ்தேசு வுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஜோதி திருப்பரனார் ஓதிய மறைப்படி ஓடி ஒழுகதிறம் கோரி நின்றேனே சுவாமி போதிய தரம் ஞானம் எனக்கருள், மோதியே இடறாது நீ காத்தருள் போதனை தன்னையே கொடுத்திடு சோதனைக் கென்னையே விலக்கிடு. - கோமகனார் 1. சரித்திர பரிபாலன், சர்வ சிருஷ்டிக்கும் சரி செய்யும் பரிகாரம் சத்துரு சங்காரன் சங்கீதம் கேட்கும், சத்திய திரு தயாளன், உத்தமர் பங்காளன், உயர்திரு மனுவேலன், உற்றத்துணையும் அவன் உவந்தோர்க்கு உபகாரன், குற்றம் எள்ளளவும் மற்ற பொற்பரன், சுற்றமும் மற்றும் அத்தனையும் அவன், நிறைவிலும் பெருங் குறைவிலும், இயேசு இறைவன் எனக் கருமையானவர். - கோமகள் 2. ஆ சித்தார் தேவனின் சித்தம் பிரகாசித்து, வாழ்ந்திட்டார் புவியில் நித்தம், சாதித்தார் நீதி தத்துவம், - அலக தனை மாய்த்திட்டாரே மகத்துவம், காணக்கிடைக்கா கருணாகரன், குணபாலன், ஞாலமதில் இவரே ஞானமெய் மணவாளன், தானமாய் பிதா தந்த தரும் பலன், பாவம் தீர்த்திட வந்த பரோபகாரம், பாட்டையும் துரை நாயகன் தன் மன்றாட்டையும், தாகம் கொண்டே காட்டிடும் (கேட்டிடும்). - கோமகனார்