பாடல் #32491
வருகிறாரே வானபரன்
🔤 Varukiraarae Vaanaparan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வருகிறாரே வானபரன் வானம் விட்டெமையழைக்க வருகிறதைப் பாரும் வானோர்களும் ஆர்ப்பரிக்க அன்பருமதிசயிக்க வருகிறதைப் பாரும் ஆனந்தமே! ஆனந்தமே! ஆர்ப்பரிப்போம் ஆனந்தமே 1. தூதர் பல கூட்டரும் தூய சங்கம் சூழ்ந்தவராய் வருகிறது பாரும் தூய ஆடைதான் தரித்து தூய்மையின் சாயலணிந்து வருகிறதைப் பாரும் துதித்திடுவோம், துதித்திடுவோம், உன்னதனைத் துதித்திடுவோம் 2. எக்காள மது தொனிக்க அக்களிப்புடையராய் வருகிறதைப் பாரும் மக்களுக்கு தாமருளும் பரிசுகளுடையராய் வருகிறது பாரும் அல்லேலூயா! அல்லேலூயா! அன்பருக்கே அல்லேலூயா 3. மாநிலத்தில் பரிதவிக்கும் பாவமற்ற மைந்தருக்காய் வருகிறது பாரும் மலினமற்று மாண்டவரை மண்ணில் விடாதரவணைக்க வருகிறதைப் பாரும் மகிமை இது, மகிமை இது, மகிமை காணும் மகிமை இது 4. கருணையின் காலம் முடிந்து கிருபையின் வாசலடைக்க வருகிறது பாரும் வாருமென் றெமையழைத்து தருணமில்லையென்றுரைக்க வருகிறதைப் பாரும் ஆனந்தமே! ஆனந்தமே! அன்புடையோர்க்கானந்தமே 5. கல்வாரி மலைதனிலே காயங்களடைந்தவர் தாம் வருகிறதைப் பாரும் காதலெம்மில் வைத்ததினால் கஸ்திகள் சகித்தவர் தாம் வருகிறதைப் பாரும் அளித்திடுவோம், அளித்திடுவோம், கண்டவரைக் அளித்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Varukiraarae Vaanaparan Vaanam Vittemaiyazhaikka Varukirathaip Paarum Vaanorkalum Aarpparikka Anbarumathisayikka Varukirathaip Paarum Aanandhamae! Aanandhamae! Aarpparippom Aanandhamae 1. Thoodhar Pala Koottarum Thooya Sanggam Soozhndhavaraay Varukirathu Paarum Thooya Aataithaan Tharitthu Thooymaiyin Saayalaninthu Varukirathaip Paarum Thuthitthituvom, Thuthitthituvom, Unnathanaith Thuthitthituvom 2. Ekkaala Mathu Thonikka Akkalipputaiyaraay Varukirathaip Paarum Makkalukku Thaamarulum Parisugalutaiyaraay Varukirathu Paarum Allaelooyaa! Allaelooyaa! Anbarukkae Allaelooyaa 3. Maanilatthil Paridhavikkum Paavamartra Maindharukkaay Varukirathu Paarum Malinamarru Maandavarai Mannil Vitaadharavanaikka Varukirathaip Paarum Makimai Ithu, Makimai Ithu, Makimai Kaanum Makimai Ithu 4. Karunaiyin Kaalam Mutinthu Kirupaiyin Vaasalataikka Varukirathu Paarum Vaarumen Remaiyazhaitthu Tharunamillaiyenruraikka Varukirathaip Paarum Aanandhamae! Aanandhamae! Anputaiyorkkaanandhamae 5. Kalvaari Malaidhanilae Kaayanggalataindhavar Thaam Varukirathaip Paarum Kaadhalemmil Vaitthathinaal Kasthigal Sakitthavar Thaam Varukirathaip Paarum Alitthituvom, Alitthituvom, Kandavaraik Alitthituvom