பாடல் #3048
நிர்ப்பந்தமான பாவியாய்
🔤 Nirppandhamaana Paaviyaay
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. நிர்ப்பந்தமான பாவியாய் நான் இங்கே தேவரீருக்கே முன்பாக மா கலக்கமாய் நடுங்கி வந்தேன், கர்த்தரே; இரங்குமேன், இரங்குமேன், என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன். 2. ஆ! என் குரூர பாவத்தால் மிகுந்த துக்கம் அடைந்தேன்; ஆ ஸ்வாமீ, துயரத்தினால் நிறைந்த ஏழை அடியேன், இரங்குமேன், இரங்குமேன், என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன். 3. என் குற்றத்துக்குத் தக்கதாய் செய்யாமல் தயவாய் இரும்; பிதாவே, என்னைப் பிள்ளையாய் இரங்கி நோக்கியருளும்; இரங்குமேன், இரங்குமேன், என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன். 4. என் நெஞ்சின் திகில் தணித்து, என்மேல் இரங்கி ரட்சியும்; திவ்விய சந்தோஷம் அளித்து எப்போதும் கூடவே இரும்; இரங்குமேன், இரங்குமேன், என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Nirppandhamaana Paaviyaay Naan Ingkae Thaevareerukkae Munpaaga Maa Kalakkamaay Natungki Vanthaen, Karttharae; Irangkumaen, Irangkumaen, Enrummaik Kenjsik Kaetkiraen. 2. Aa! En Kuroora Paavatthaal Mikundha Thukkam Atainthaen; Aa Svaamee, Thuyaratthinaal Niraindha Aezhai Atiyaen, Irangkumaen, Irangkumaen, Enrummaik Kenjsik Kaetkiraen. 3. En Kurtratthukkuth Thakkathaay Seyyaamal Thayavaay Irum; Pithaavae, Ennaip Pillaiyaay Irangki Nokkiyarulum; Irangkumaen, Irangkumaen, Enrummaik Kenjsik Kaetkiraen. 4. En Nenjsin Thikil Thanitthu, Enmael Irangki Ratsiyum; Thivviya Santhosham Alitthu Eppothum Koodavae Irum; Irangkumaen, Irangkumaen, Enrummaik Kenjsik Kaetkiraen.