பாடல் #233
அறுத்துச் சேர்க்க ஆளில்லாமல்
🔤 Arutthuch Saerkka Aalillaamal
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அறுத்துச் சேர்க்க ஆளில்லாமல் அழிந்து போகின்ற பழுத்துக் கிடக்கும் அறுவடையை பாரும் இறைவா (இறைவா) 1. திறமை மிகுந்த இளைஞர் குலம் சும்மா நிற்குதே பரமன் உந்தன் அழைப்புக்காக காத்துக்கிடக்குதே உழைக்க ஆர்வம் உள்ள இந்த இளைஞரையெல்லாம் – 2 அழைத்துச்சேரும் உம்மரசை பரப்புவதற்கே 2. அறவடைக்கு அனுப்பட்டோர் அதிகமில்லையே அனுப்பப்பட்டோர் அறுவடைக்கும் போதவில்லையே எத்தனையோ பணிகளிலே மூழ்கி இருப்பதால் – 2 மறைபரப்புப் பணியைச் செய்ய இயலவில்லையே 3. காலநேரம் தேவை எல்லாம் அறிந்த இறைவா துறவறத்தோர் இப்பணிக்கு துணையாய் வந்திட தந்தருளும் ஆற்றல்மிக்க இல்லறத்தோரை – 2 உம்மரசாம் மீட்புப்பணி முழுமை எய்திட
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Arutthuch Saerkka Aalillaamal Azhinthu Pokindra Pazhutthuk Kidakkum Aruvataiyai Paarum Iraivaa (iraivaa) 1. Thiramai Mikundha Ilainjar Kulam Summaa Nirkuthae Paraman Undhan Azhaippukkaaga Kaatthukkidakkuthae Uzhaikka Aarvam Ulla Indha Ilainjaraiyellaam – 2 Azhaitthuchsaerum Ummarasai Parappuvatharkae 2. Aravataikku Anuppattor Athigamillaiyae Anuppappattor Aruvataikkum Podhavillaiyae Etthanaiyo Panigalilae Moozhki Iruppathaal – 2 Maraibarappup Paniyaich Seyya Iyalavillaiyae 3. Kaalanaeram Thaevai Ellaam Arindha Iraivaa Thuravaratthor Ippanikku Thunaiyaay Vanthida Thandharulum Aartralmikka Illaratthorai – 2 Ummarasaam Meetpuppani Muzhumai Eythida