பாடல் #218
அருளின் ஒளியைக் கண்டார்
🔤 Arulin Oliyaik Kantaar
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. அருளின் ஒளியைக் கண்டார் இருளின் மாந்தரே மருள் மரண மாந்தரில் திரு ஒளி வீச. 2. ஜாதிகளைத் திரளாக்கி நீதி மகிழ்ச்சியால் கோதில் அறுப்பில் மகிழ ஜோதியாய்த் தோன்றினார். 3. கர்த்தன், பிறந்த பாலகன், கர்த்தத்துவமுள்ளோன் சுத்த அவரின் நாமமே மெத்த அதிசயம். 4. ஆலோசனையின் கர்த்தனே, சாலவே வல்லோனே பூலோக சமாதானமே மேலோக தந்தையே. 5. தாவீதின் சிங்காசனத்தை மேவி நிலைகொள்ள கூவி நியாயம் நீதியால் ஏவி பலம் செய்வார்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Arulin Oliyaik Kantaar Irulin Maandharae Marul Marana Maandharil Thiru Oli Veesa. 2. Jaathigalaith Thiralaakki Neethi Makizhchsiyaal Kothil Aruppil Makizha Jothiyaayth Thonrinaar. 3. Kartthan, Pirandha Paalakan, Kartthatthuvamullon Suttha Avarin Naamamae Mettha Athisayam. 4. Aalosanaiyin Kartthanae, Saalavae Vallonae Poologa Samaathaanamae Maeloga Thanthaiyae. 5. Thaaveethin Singkaasanatthai Maevi Nilaikolla Koovi Niyaayam Neethiyaal Aevi Palam Seyvaar.