பாடல் #1768
ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து
🔤 Aerukinraar Thallaati Thavazhnthu
🎙 Sis. சாராள் நவரோஜி • 💿 பழைய பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து களைப்போடே என் இயேசு குருசை சுமந்தே என்நேசர் கொல்கொதா மலையின் மேல் நடந்தே ஏறுகின்றார் கன்னத்தில் அவன் ஓங்கி அறைய சின்னப் பிள்ளை போல் ஏங்கி நின்றார் அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி ஆண்டவரை அனுப்புகிறான் மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே நெஞ்சைப் பிளந்தான் ஆ கொடுமை இரத்தம் நீரும் ஓடி வருதே இரட்சகரை நோக்கியே பார் இந்தப் பாடுகள் உந்தன் வாழ்வுக்காய் சொந்தப் படுத்தி ஏற்றுக் கொண்டார் நேசிக்கின்றாயோ இயேசு நாதரை நேசித்து வா குருசெடுத்தே சேவல் கூவிடும் மூன்று வேளையும் சொந்தக் குருவை மறுதலித்தான் ஓடி ஒளியும் பேதுருவையும் தேடி அன்பாய் நோக்குகின்றார் பின்னே நடந்த அன்பின் சீஷன் போல் பின்பற்றி வா சிலுவை வரை காடியை போல கசந்திருக்கும் கஷ்டங்களை அவரிடம் சொல் செட்டைகளின் கீழ் சேர்த்தணைத்திடும் சொந்தத் தாயின் அன்பதுவே எருசலமே ! எருசலமே என்றழுதார் கண் கலங்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aerukinraar Thallaati Thavazhnthu Kalaippotae En Yesu Kurusai Sumanthae Ennaesar Kolkothaa Malaiyin Mael Natanthae Aerukinraar Kannatthil Avan Ongki Araiya Sinnap Pillai Pol Aengki Ninraar Andhap Pilaatthum Kaiyaik Kazhuvi Aandavarai Anuppukiraan Minjsum Pelatthaal Eetti Etutthae Nenjsaip Pilanthaan Aa Kotumai Rattham Neerum Oti Varuthae Iratsakarai Nokkiyae Paar Indhap Paatugal Undhan Vaazhvukkaay Sondhap Patutthi Aerruk Kontaar Naesikkinraayo Yesu Naadharai Naesitthu Vaa Kurusetutthae Saeval Koovitum Moonru Vaelaiyum Sondhak Kuruvai Marudhalitthaan Oti Oliyum Paethuruvaiyum Thaeti Anpaay Nokkukinraar Pinnae Natandha Anpin Seeshan Pol Pinbarri Vaa Siluvai Varai Kaatiyai Pola Kasanthirukkum Kashtanggalai Avaridam Sol Settaigalin Keezh Saertthanaitthitum Sondhath Thaayin Anbathuvae Erusalamae ! Erusalamae Endrazhuthaar Kan Kalangga