பாடல் #1621
என்ன பாக்கியம் எவருக்குண்டு
🔤 Enna Paakkiyam Evarukkuntu
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்ன பாக்கியம், எவர்க்குண்டு இந்தச் சிலாக்கியம்? விண்ணவரும், புவிமேவும் முனிவர்களும், மன்னவருங் காணா மகிபனை யான் கண்டேன் --- என்ன 1. வானகந் தானோ - அல்லதிது – வையகந் தானோ? ஆனகம் சென்று எழுந்த அரும்பொருள் கானகந் தன்னில் என் கையில் அமர்ந்தது - என்ன 2. சாமியைக் கண்டேன் - மகானந்தம் - சாலவுங்கொண்டேன், காமரு தேங்கனி வாய்கள் துடிப்பதும், கண்ணும் மனமும் களிக்க விழிப்பதும் - என்ன 3. அன்னமும் நீயே - கிடைத்தற்கருஞ் சொன்னமும் நீயே; மின்னறு மேகத் திருக்கை துறந்தையோ? மேதினி தன்னை ரட்சிக்கப் பிறந்தையோ? - என்ன 4. போதும் இவ்வாழ்வு - பரகதி - போவேன் இப்போது; ஏதேன் என்ற பரதீசும் வந்திட்டது; எண்ணில்லாத செல்வம் என் கையில் கிட்டுது - என்ன
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enna Paakkiyam, Evarkkuntu Indhach Silaakkiyam? Vinnavarum, Puvimaevum Munivarkalum, Mannavarung Kaanaa Makibanai Yaan Kantaen --- Enna 1. Vaanakan Thaano - Allathithu – Vaiyakan Thaano? Aanakam Senru Ezhundha Arumporul Kaanakan Thannil En Kaiyil Amarndhathu - Enna 2. Saamiyaik Kantaen - Makaanandham - Saalavungkontaen, Kaamaru Thaenggani Vaaykal Thutippathum, Kannum Manamum Kalikka Vizhippathum - Enna 3. Annamum Neeyae - Kitaittharkarunj Sonnamum Neeyae; Minnaru Maegath Thirukkai Thuranthaiyo? Maethini Thannai Ratsikkap Piranthaiyo? - Enna 4. Pothum Ivvaazhvu - Parakathi - Povaen Ippothu; Aethaen Endra Paratheesum Vanthittathu; Ennillaadha Selvam En Kaiyil Kittuthu - Enna