பாடல் #15
ஏசுவின் அன்பிற்கு இணையில்லையே
🎙 Pr. K. S. வில்சன் • 💿 இயேசுவின் அநாதி ஸ்நேகம்
ஏசுவின் அன்பிற்கு இணையில்லையே - அதை எண்ணி எண்ணியே நான் புகழ்ந்திடுவேன் கிருபைகளால் என்னை நடத்தினாரே ஜீவிய காலம் எல்லாம் பாடிடுவேன் 1. எண்ணில்லா நன்மைகள் செய்திட்டாரே என்றென்றும் வழுவாமல் காத்திட்டாரே மாராவின் கசப்பை மதுரமாய் மாற்றினார் மாறாத நேசத்தால் தாங்கினாரே 2. சோதனை நேரத்தில் பெலன் தந்தாரே சோர்ந்திட்ட வேளையில் கிருபை தந்தாரே சத்ருவின் கோட்டைகளை நிர்மூலமாக்கினார் சந்தோஷ கீதங்கள் பாடச் செய்தார் 3. செங்கடல் போல் வந்த துன்பங்களில் செம்மையாக என்னை நடத்தினாரே தண்ணீரின் நடுவில் எனக்கொரு வழியை என் கர்த்தர் ஆயத்தம் செய்திட்டாரே 4. எரிகோவின் மதில்களை தகர்த்திட்டாரே எனக்காக என் தேவன் யுத்தம் செய்தாரே என் கண்களால் அதை காணவும் செய்தாரே என்நாளும் வெற்றியே தந்திட்டாரே