பாடல் #1383
பார சிலுவைதனை சுமந்து
🎙 Sis சுஜாதா செல்வின் • 💿 நெஞ்சமே
பார சிலுவைதனை சுமந்து ஏறி செல்கின்றார் மலை மேல் லோக பாவம் யாவையும் தன்மேல் ஏற்றுக்கொண்டாரே - அன்பாகவே எனக்காய் அழுதிட வேண்டாமே நீ உனக்காய் அழு என்றார் இயேசு உனக்காய் அழு என்றாரே பச்சை மரத்துக்கே இவைகளை செய்தால் பட்ட மரத்துக்கென்னவோ என்றாரே பட்ட மரத்துக்கென்னவோ அறிந்திடாமல் செய்திடும் அவர்களை மன்னியும் என்றார் - பிதாவிடம் மன்னியும் என்றார்