பாடல் #1330
காரிருள் சூழ்ந்தாலும் குழப்பங்கள் வந்தாலும்
🔤 Kaarirul Soozhnthaalum Kuzhappanggal Vanthaalum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காரிருள் சூழ்ந்தாலும் குழப்பங்கள் வந்தாலும் கலங்காதே மனமே காத்திட ஒருவர் உண்டே நீ அறிவாய் அவர் நாமம் அதிசயமே போதனை செய்ய வேதமே தந்தவர் பாதுகாப்பார் உன்னை நாதனை நம்பு , நாமம் ஒன்றுண்டு ஆலோசனைக் கர்த்தராம் சொல்லி முடியாத சோதனை சூழும் காலங்கள் வந்திடுமே கல்வாரி நாயகன் ஜெயம் தரும் தேவன் அவர் நாமம் " வல்லமையே சஞ்சலம் நிறைந்தே சோர்ந்திடும் மாந்தர்க்கு அன்பினை போதிப்பாயோ அஞ்சிடும் காலம் ஆறுதல் தருவார் அவர் நாமம் ' சமாதானமே சத்திய சாட்சிகள் எழும்பிட இன்றே சார்ந்திடுவாய் இயேசுவை பக்தியாய் வாழ்ந்தே சேருவோம் சீயே அவர் நாமம் நித்திய பிதா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaarirul Soozhnthaalum Kuzhappanggal Vanthaalum Kalangkaathae Manamae Kaatthida Oruvar Untae Nee Arivaay Avar Naamam Athisayamae Podhanai Seyya Vaedhamae Thandhavar Paathukaappaar Unnai Naadhanai Nampu , Naamam Onruntu Aalosanaik Karttharaam Solli Mutiyaadha Sodhanai Soozhum Kaalanggal Vanthitumae Kalvaari Naayakan Jeyam Tharum Devan Avar Naamam " Vallamaiyae Sanjjalam Nirainthae Sornthitum Maandharkku Anpinai Pothippaayo Anjsitum Kaalam Aarudhal Tharuvaar Avar Naamam ' Samaathaanamae Satthiya Saatsigal Ezhumpida Inrae Saarnthituvaay Yesuvai Pakthiyaay Vaazhnthae Saeruvom Seeyae Avar Naamam Nitthiya Pithaa