பாடல் #1006
இறந்தோரை வாழவைக்கும் வல்லவர்
🔤 Iranthorai Vaazhavaikkum Vallavar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இறந்தோரை வாழவைக்கும் வல்லவர்
எனக்குள் வந்து தங்கிவிட்டார்
இல்லாதவரை இருக்கச்செய்யும் நல்லவர்
மனக்கண் திறந்துவிட்டார்
அல்லேலூயா ஆனந்தம
செடியான கிறிஸ்துவோடு இணைந்துவிட்டேன்
கொடியாக அவருக்காய் படர்ந்திடுவேன்
பாவம் சாவு இவற்றினின்று மீட்கப்பட்டவன்
இனி எனக்கு தண்டனை தீர்ப்பே இல்லை
இயேசுகிறிஸ்து பெயராலும் ஆவியாலும்
நீதிமானாய் கழுவப்பட்டு தூய்மையானேன்
மூலைக்கல்லாம் கிறிஸ்துவின் மேல் கட்டப்பட்டவன்
ஆவி தங்கும் ஆலயமாய் வளர்கின்றவன்
கர்த்தரின் கைவேலைப்பாடு நான் அல்லவா
அவர் சாயல் காட்டும் கண்ணாடி நான் அல்லவா
புதிதாய் பிசைந்து புளிப்பில்லா மாவு நானே
துர்க்குணங்களை தீமைகள் தவிர்த்துவிட்டேன்
பழைய மனிதன் சிலுவையிலே அறையப்பட்டதால்
பாவத்திற்கு அடிமையாக வாழ்வதில்லை
தூய ஆவி துணையாலே வாழ்கின்றவன்
ஆவிகாட்டும் நெறியிலே நடக்கின்றவன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iranthorai Vaazhavaikkum Vallavar
Enakkul Vanthu Thangkivittaar
Illaadhavarai Irukkachseyyum Nallavar
Manakkan Thiranthuvittaar
Allaelooyaa Aanandhama
Setiyaana Kiristhuvotu Inainthuvittaen
Kotiyaaga Avarukkaay Patarnthituvaen
Paavam Saavu Ivarrininru Meetkappattavan
Ini Enakku Thandanai Theerppae Illai
Yesukiristhu Peyaraalum Aaviyaalum
Neethimaanaay Kazhuvappattu Thooymaiyaanaen
Moolaikkallaam Kiristhuvin Mael Kattappattavan
Aavi Thangkum Aalayamaay Valarkindravan
Karttharin Kaivaelaippaatu Naan Allavaa
Avar Saayal Kaattum Kannaati Naan Allavaa
Puthithaay Pisainthu Pulippillaa Maavu Naanae
Thurkkunanggalai Theemaigal Thavirtthuvittaen
Pazhaiya Manidhan Siluvaiyilae Araiyappattathaal
Paavatthirku Atimaiyaaga Vaazhvathillai
Thooya Aavi Thunaiyaalae Vaazhkindravan
Aavikaattum Neriyilae Natakkindravan